STORYMIRROR

Keerthana Chandrasekaran

Romance Tragedy Others

4  

Keerthana Chandrasekaran

Romance Tragedy Others

பிரிவுழல்தல்

பிரிவுழல்தல்

1 min
309


நாம் சென்ற இடம் எங்கும் என் தேடல்கள் தொடர்கின்றன

வீதி விளக்குகளில் ஞாபகங்கள் எரிகின்றன

மரித்த காதலுக்கு சுவாசம் ஏனோ

மரத்த வலிகளுக்கு மருந்துகள் வீனோ

என் மனதை வருடும் உன் வார்த்தைகளும்

என் உயிரை பறிக்கும் உன் பார்வைகளும்

இன்னும் இன்னிசையாய் ஒலிப்பதேன்

என் மறைந்த வெட்கம் விழிப்பதேன்

மை இட்ட கண்களுக்கு பொய் இட்ட உன் உதடுகள்

கேட்க நினைத்த கேள்விக்கெல்லாம்

பதிலாய் உன் மௌனங்கள்

வழியற்ற பாதைகளில் வலியாய் உன் சுவடுகள்

வேலியிட்ட நிலத்திலும் வேர்களாய்

உன் நினைவுகள்

வாடிப்போன பயிர்களுக்கு நீர்ப்பாசனம்

எனை தண்டித்த காதலுக்கும் சாப விமோசனம்

இலக்குகளை உன்னுள் தொலைத்து இனி நான் போவது எங்கே

இக்கவிதை வாக்கியத்தில் மடிகிறேன் இங்கே


Rate this content
Log in

Similar tamil poem from Romance