STORYMIRROR

S. Meena

Inspirational

3  

S. Meena

Inspirational

பேனாவின் மீனா

பேனாவின் மீனா

1 min
454


எண்ணங்களை எடுத்து

எழுத்துக்களாய் விதைத்து

கற்பனை உரமிட்டு

கவிதையை அறுவடைச்செய்கிறேன்..!


இன்பமோ துன்பமோ

இஷ்டமோ கஷ்டமோ

எல்லா நேரத்திலும்

எந்த நிகழ்வையும்

உன்னிடம் தானே

உடனே பகிர்கிறேன்..!


என் உளரல்களைக் கேட்டு

எழுத்துக்களாய் வடித்து

எனக்குள் இருக்கும்

எழுத்தாளரை எனக்கே

அறிமுகம் செய்துவிட்டாய்..!


எத்தனை நன்றிகள் 

உரைப்பேன் உனக்கு..!


உன்னோடு பயணிக்கும்

உன்னத பயணத்தை

வாழ்நாளெல்லாம் தொடர

வரம் வேண்டுகிறேன்

இறைவனிடம்..!

மீனாவின் பேனாவாக அல்ல

பேனாவின் மீனாவாக..!




Rate this content
Log in

Similar tamil poem from Inspirational