STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Inspirational

4  

ANURADHA CHANDRASEKHAR

Inspirational

ஒளிதரும் நிழல்

ஒளிதரும் நிழல்

1 min
405

மலர்ந்த மார்கழிக் காலைப் பொழுதில் 

சிலிர்த்த எண்ணங்களுடன்

புலர்ந்த புத்தாண்டுப் பயணம்

மலரும் நினைவுகளாய்த் தங்கிய 

மாலைப் பொழுதும் தாண்டி

இரவின் கரங்களில் இனிதே தவழ்ந்த தருணம்


நினைத்துப் பார்க்கிறேன்


நீங்காத சுவடுகளாய்த் தேங்கியவை சில

விண்மீன்களாய்த் தோன்றி மின்மினியாய் மறைந்தவை சில 

என்னிற்கலந்து எனக்குள்ளே கரைந்தவை சில

என்மேல் தெறிக்காமல் எங்கோ மறைந்தவை சில


எந்த உருவத்திலும் வந்த படிமங்கள்

உளிகளாய் மாறி என்னைச் செதுக்கியதும் உண்டு

உரங்களாய் மாறி வளம் சேர்த்ததும் உண்டு

ஓவியங்களாய் மாறி ஒளிரவைத்ததும் உண்டு 

செங்கனலாய் மாறி சீற வைத்ததும் உண்டு

சிறு பொறிக்குள் என்னைச் சிதற வைத்ததும் உண்டு 


சின்னக் கத்திகள் என் சிறகுகளைச் சிதைக்காமல்

கடும்புயல்கள் என் கனவுகளைக் கலைக்காமல்

மனமெனும் மேகத்துள் மறைந்து மறைந்து தோன்றும் நிலவாய் 

நம்பிக்கை தரும் நிகழ்வுகள்   தடம் பதித்த சுவடுகளில் 

வரும் ஆண்டிலும் பயணம் தொடர

ஒளிதரும் நிழலாய்

கடந்தஆண்டு கடக்கட்டும்


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar tamil poem from Inspirational