STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Abstract

3  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

நாளைமுதல்

நாளைமுதல்

1 min
160


வீட்டில் நுழைந்ததும் வீசி எறியும் செருப்பு

களைந்த உடையைக் கசக்கி எறியும் வேகம்

கையிலிருந்த கைக்கடியாரம் எங்கோ பறக்க

வீசிய கைப்பை சுழன்று மேசையைத் தஞ்சமடைய

தொடர்ந்த நான் சோபாவைத் தஞ்சமடைய


மணக்கும் காபி மனையின் கைகளில்

சுட்டெரிக்கும் பார்வை சுடர்விழிகளில் 

ஏனிந்த அலங்கோலமென அன்று ஏசிய தாய்

என்மனைவியின் விழிகளில் இன்று தெரிகிறாள்

வெளியில்காட்டும் ஒழுக்கம் வீட்டினுள் நுழைய மறுக்கும் அவலம்

 

மணித்துளிகள் கடந்து மறைந்தபின்

நினைத்துக் கொள்கிறேன் நாளைமுதல்

நல்லொழுக்கத்துடன் உள்ளே நுழைவேன்


பின்னால் என்மகன் வருகிறான்

காலின் ஷூவைக் கழற்றிவீசி

புத்தகங்கள் பறக்க பையை வீசி

உடையைக் களைந்து நடையில் வீசி


அடித்த கைகள் அமைதி அடைந்தபின்

நினைத்துக் கொள்கிறேன் நாளைமுதல்

அவனை அடிக்கமாட்டேன் 

நல்லவிதமாய் சொல்லி திருத்துவேன்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract