மரம்
மரம்
1 min
218
அழகின் உச்சம்!
காற்றின் சலசலப்பில்
கவிதை பாடும் கம்பீரம்!
பூமித்தாயின் மடியில்
வேர்விட்டு வீறுகொண்டெழும்
வியப்பு!
எந்தப் புயலுக்கும்
ஈடு கொடுக்கும் இதயம்!
வளைந்து
வளைந்து கொடுத்து
வானுயரும் வனப்பு!
வாழ்வின் அரிச்சுவடி!
உணர்ந்தால் உயரும் அடி!!