கவியரசர் கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசன்
கண்ணனுக்கு தாசா...உன்
கவி என்ன லேசா...
நீ காவி பாட வந்தது ...
இன்னிசைக்கா...
திரை இசைக்கா...
மண்ணிசைக்கா... எங்களின்
நெஞ்சிசைக்கா...
பிறப்பிலிருந்து இறப்பு வரை...
ஆனந்தம் முதல் அமைதி வரை...
வீடு முதல் வீதி வரை...
தாலாட்டிலிருந்து தனித் தேற்று வரை...
நீ பாடாத பாடலெங்கே...கவியரசே...
கோப்பையில்...
கோலமயிலில் ...
கோனோச்சி...நாஸ்திகம் நமதல்ல
ஆஸ்திகமே என்று
அர்த்தமுள்ள இந்துமதம்
அழகாய் நீ தந்ததென்ன !
இயேசு காவியம் பாடி
மாங்கனி சமைத்து
பஜகோவிந்தம் கூவி
நீ பாடிய கவிகளில்
ஸ்ருதி சேராத ராகங்களும்...
பாடிக்கொடுத்த மங்கலங்களும்...
ஶ்ரீ கிருஷ்ண கவசமும்... கிருஷ்ண கானமும்...
கவிதாஞ்சலியும்...தாய்ப்பாவையும்...
அவளுக்கு ஒரு பாடலும்...என
கவிகள் தான் எத்தனை...
ஆயிரம் தீவு அங்கயற்கண்ணியும்...
ஆயிரங்கால் மண்டபமும்...
அதைவிட ரகசியம்...அரங்கமும் அந்தரங்கமும்...
முப்பது நாளும் பௌர்ணமியில்..
நடந்த கதை...
சிகப்புக் கல் மூக்குத்தி...சிங்காரி
பார்த்த சென்னை...
ஒரு கவிஞனின் கதையில்... அத்வைத ரகசியம் என புதையல்களாய்
புதினங்கள்...ஒவ்வொன்றும்
வனவாசம் வீசும் பிருந்தாவனம்...
நீ வாழும் சரிதம்...உனக்கு நீயே
எழுதிக்கொண்டது உன்
வாழ்க்கைச் சரிதம் !
வணங்குகிறோம் கவிவேந்தனே...
உன் பாடல் பாடும் நாளெல்லாம்...
உன் பிறந்த நாள் தானே !
உங்களின்...MK🎶🕊️
