STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

3  

Manoharan Kesavan

Inspirational

தமிழ்மொழி

தமிழ்மொழி

1 min
224



மௌனம் கலைந்த விடத்தில் மலர்ந்தவள் 

பேசுகின்ற மொழிகளுக்கு எல்லாம் மூத்தவள் 

தலை இடை கடையென சங்கமித்து 

உலகு புகழ் இலக்கியங்களாய் பரிணமித்து 

வல்லினம் இடையினம் மெல்லினம் இவைகளின் 

சொல்லினமாகி ஆழ்ந்த அறிவின் புகலிடமாகி 

உயிர் மெய் உயிர்மெய் ஆய்தமென 

இயல் இசை நாடகமாய் அழகுகொண்டு 

தன்னிகரில்லாத் தமிழ் எனும் பெயர்க்கொண்டு  

தரணியை ஆள்பவள் எங்களின் தாயவள்

தூயவள் என்றும் புதியவள் செம்மொழியானவள்

அழிவில்லாதவளவள் தாள் போற்றுவோம் தலைபணிந்து !


நன்றியுடன் ...

மனோஹரன் கேசவன்


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational