STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

4  

Manoharan Kesavan

Inspirational

"நான்"ஆக...

"நான்"ஆக...

2 mins
7

சுழலும் பூமியினுள்

வாழ்க்கைக் கென்று 

அர்த்தம்....

அர்த்தமற்ற ஒன்று...

நான் என்பது முளைக்காதவரை !

நான் என்பதே அர்த்தம் என்றால்

அனர்த்தம் அல்லவா அது !

ஆடும் அண்ட சராசரங்களின் ஊடே 

புள்ளி வடிவில் 

புவி இருக்க...

நான்

மட்டும் எப்படி

அண்ட சராசரமாய் !

"நான்"இல்லாது நான் இல்லை

அன்றிலும் நான் இல்லை எனினும்

"நான்" உண்டு...

"நானே" நான் ஆன போதிலும்

நான் என்பது உள்ளவரை நான்

"நான்" ஆவதில்லை !

"நானை" உணர வந்த நான்

ஏனோ நான் எனும் மாயையில் !

எல்லாமும் "நான்" ஆக 

நான் மட்டும் நானாக...

விந்தையிலும் விந்தை...!

தெளியவில்லை சிந்தை...!

"நானுக்கோர்" 

பேர் சூட்டி

பட்டமிட்டு

பதவி தந்து

பந்து மித்ர உறவில் இணைத்து

ஆட்டமென்ன பாட்டமென்ன

அனைத்தும் முடிந்து

"அது" அடங்கிப் போவதென்ன !

விடையேதும் அறியாமல்

விளைவேதும் தெரியாமல்

வினைப்பயனும் புரியாமல்

விழுகிறேன் எழுகிறேன் 

விரைகிறேன் 

வீழ்ந்து முடிந்து எழுகவே

மீண்டுமீண்டும்...நான்

"நான்" ஆக...!


நன்றியுடன்...

MK🎊🎶🕊️



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational