கடல்
கடல்
வானமும் பூமியும்
எனது உறவினர் என்பதால்
அஞ்சல்வழி
கடிதம் அனுப்பினால்
தாமதம் என்றே
மழைத்தூதுவனை
அனுப்பியதில்
அடுக்ககங்கள் அநீதியாய்
முளைத்ததால்
சென்னைக்கும் எங்களுக்கும்
பகை என்பதால்
தூதுவனாகிய உன்னையும்
சிறைபிடிப்போம் என்றே கருத்த
அசுர மேகம் உரைத்தது கேட்டு
நானும் மக்களுடன் போரிட
காத்திருக்கிறேன்.