கனவு மெய் ஆகுமா
கனவு மெய் ஆகுமா
அனைவரும் மகிழிச்சியுடன் வாழும் சூழல் உருவகவேண்டும்,
மனதில் மன நிறைவு பெற்று பெற்றோர்கங்கள் இருக்கவேண்டும்,
எப்போதும் ஒரே போல சீரான அன்பை குழந்தைகள் பெறவேண்டும்,
மனிதர்கள் ஒவ்வொருவரிடத்தில் அன்பை மட்டும் பகிர வேண்டும்,
பூமியில் வரட்சி நீங்கி எங்கும் பச்சைப்பசேல் என மாறவேண்டும்,
மண்ணில் வளமை வற்றாமல் என்றும் பெறுக வேண்டும்,
நீர் நிலையங்களில் தண்ணீர் எப்போதும் குறையாமல் ஓட வேண்டும்,
உலகில் காற்று மாசுகள் நீங்கி இனிமையான பூங் காற்று வீசவேண்டும்,
பறவைகள் அனைத்தும் இனிமையான ஓசையை எழுப்பவேண்டும்,
விலங்குகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒத்துமை காத்திட வேண்டும்,
இங்கு இருக்கும் இயற்கை எல்லா உயிர்களுக்கும் சமம் என்ற புரிதல் வேண்டும்,
உயிரனங்கள் யாவும் ஒன்றே என கருதி மனிதன் அமைதிகத்திட வேண்டும்,
இத்தகையான ஒரு கனவு அனைவரிடமும் இருக்க வேண்டும்,
காணும் கனவு நிஜமாக நம்மால் முயன்ற முயற்ச்சியை செய்ய வேண்டும்,
வாழ்வில் ஒரு பகுதியாவது நாம் மற்றவர்களுக்காக உதவிட எண்ணம் வேண்டும்,
ஒற்றுமை காத்து வாழும் சூழ்நிலை வர வேண்டும் என்ற கனவு மெய் பட வேண்டும்.