காதலியே நீ...கவனி
காதலியே நீ...கவனி
உன் நினைவு உழுத
இதயத்திலே...
கண்ணீர் பாசனத்தில் ...
கவலை விதைத்து ஆயுளை அறுவடை
செய்து கண்டேன்...அது
ஒருமேனி கண்டதென் திருமேனி...
காதலியே நீ கவனி...
அம்பாசமுத்திரத்தில்
என்பால் அன்பு வைத்தாய்...
பாவூர்சத்திரத்தில்
உன் பால் எனை ஈர்த்தாய்...
ஏதோ ஆத்திரத்தில் வம்பால் எனை வெறுத்தாய்...இன்று
பலர் பால் அறிவுரையால் உறவில் எனை தவிர்த்தாய்...
வான்கடல் விண்வெளியில்
ஆணெது பெண்ணெது
அடையாளம் தெரியாமல்
ரசிக்கும் உலகமிது...
காதல்கடல் குற்றமதில்
உனதெது எனதெது
பிறவிக்கு புரியாமல்
வாழும் நிலையிது...
கூடுவாஞ்சேரியதில்
கூட்டுறவில் ஒன்றி வந்தாய்...
பாண்டிச்சேரியதில்
நட்புறவை ரத்து செய்தாய்...
வில்லுக்குறியதில்
பகையுறவை பதிவு செய்தாய்...இன்று
மீளவிட்டான் ஊரதில்
மீளா பிரிவு தந்தாய்...
வான்கடல் விண்மீனில்
ஆணெது பெண்ணெது
அடையாளம் தெரியாமல்
ரசிக்கும் உலகமிது...
காதல்கடல் குற்றமதில்
உனதெது எனதெது
பிறவிக்கு புரியாமல்
வாழும் நிலையிது...