கோடைகாலம்
கோடைகாலம்
சித்திரை
தமிழ் புத்தாண்டு பிறப்பு...இது
கோடைகாலத்தின்
தலையாய சிறப்பு...
சித்திரை திருவிழா
மதுரையின் பங்களிப்பு
அக்கினி நட்சத்திரம்
சித்திரையில் படையெடுப்பு...
சித்திரை என்றாலே
வரும் அண்ணா நினைப்பு...
மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
மக்களோ நித்திரை
விலகட்டும் மனத்திரை
மறவாமல் வாக்கிடுங்கள்...
சூரியன் நம் முத்திரை...
கோடைகாலம்
விடுமுறையின்
குதூகலம்...
கொடைக்கானல்
காணல் அற்புதம்
ஊட்டியும் அற்புதம்...
பணமிருந்தால்
உல்லாசம்...
நிதி குறைந்தால்
நன்னாரி சர்பத்தும்
நுங்கும்...
அதற்கும் தட்டுப்பாடானால்
குச்சி ஐஸ்சும்...
கோடைகாலம்
நீர் மோர் தானமும்
நீர் மேடையும்...
கோடைகாலம்
வற்றிய குளமும்
கொதிநீர் ஆறும்...
வயலில் உளுந்தும்
பல நேர குளியலும்
இன்பமயமே...
கசக்கும் வேம்பில்
கனி இனிக்க
பறவைகளின்
ஆனந்த கூத்து...
அடர்ந்த புல்வெளியும்
வெட்டை வெளியாய்
கால்நடைகளுக்கு
உணவு பற்றாக்குறை...
கோடைகாலம்
பழைய சோறு
பஞ்சாமிர்தமாகும்...
வெள்ளரி தர்பூசணி தாக
தவிப்பிற்கு ...
கோடைகால
சித்திரை பெளர்ணமி
கடற்கரை நதிக்கரை
மக்கள் திரளாக...
கொசுவற்ற
கோடைகாலம்
வரவேற்க தக்கதே...
கோடைகாலம்
காற்றுக்காக
கதவை திறந்து
களவுக்கு இடம்
கொடாதீர்கள்...
கோடை வெயிலை
தன் வறுமையினும்
கொடியதாக கூறிய
புலவர்களுண்டு...
கோடை காலம்
சாலைகளில்
கானல் நீர் பிரசவிக்கும்
கோடைகாலம்
விடுமுறையால்
நன்மையே
சம்பவிக்கட்டும்...
அனல் இல்லாமல்
அடுப்பில்லை
அனல் இல்லாமல்
நம் உடல் இல்லை...
கோடைகாலம்
இல்லாமல்
வாழ்நாளில்லை...
வைகாசிக்கு
ஆசிதந்து
கோடைகாலம்
இடம் பெயரும்...
கோடைகாலத்திற்கு
விசுவாசியாகி
நாமும் வளம் பெறுவோம்......