கா(வ)(த)லனோ
கா(வ)(த)லனோ
என் மனம் களி புரிய
உன் முகம் நாணம் காணுமோ
இதயம் உன்னது முகமூடி அணிந்ததோ
பிறை காண திரை விலகுமோ
மறை ஓத முறை செய்யவோ
உனைக் கண்டு என் மனம் கணம் கொண்டதேனோ
உன் நினைவு என்னோடு தப்பாமலே
உன் பார்வை கொண்ட பாத்திரம்
நான் அறியேனே
என் பாதம் செல்லும் பாதை
நீ அறியாயோ
விழித்திரையில் நிறைந்தாயே
வழிப்பறியும் செய்தாயே
வந்ததை விட்டே
வழியும் மறந்தே
சென்றதை தேடுகிறேனே
காலம் சொல்லுமே
காவலனாய் நிற்பேனோ
இல்லை அக்காட்டிலே மறிப்பேனோ
நின்றதைக் காணவே
நீ இருந்தால் போதுமே
நின்றாலும் போனாலும்
உன் முன்னே நானே...