இயற்கையின் பரிசு
இயற்கையின் பரிசு
மரத்திலிருந்து வெளிவரும் சிறு கனி போல;
புத்துணர்ச்சியுடனும், இனிமையுடனும், பூக்களின் நறுமணத்தால் சூழப்பட்டு;
வறண்ட மற்றும் மழை காலங்களைக் கடந்து;
தென்றல் மற்றும் புயல் காற்றிணை எதிர்கொண்டு;
பறவைகளின் இனிமையான கூக்குரல்கள் மற்றும் இடிகளின் சத்தத்தினில்;
அழகான சூரிய உதயமும் அமைதியான சூரிய அஸ்தமனம் நிகழும்;
ஒரு நாள் போல, உலகம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது.
அப்படியே,
தாயிடமிருந்து உருவாகும் ஒரு சிறிய கரு ஓர் உயிராக வெளிவருவது போல;
அழகும், இனிமையும் நிறைந்த மகிழ்ச்சியான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்டு;
தூக்கம், மயக்கம் மற்றும் மனநிலை மாற்றங்களைக் கடந்து;
காலை நோயை எதிர்கொண்டு , இனிப்பு மற்றும் புளிப்பு சுவையின் ஆசையால் வரக் கூடிய குமட்டல் போன்ற உணர்வுடன்;
பிரசவ வலிக்கு முன் வரும் குத்தல், உதை எல்லாவற்றையும் மேற்கொண்டு;
கடவுளின் விலைமதிப்பற்ற படைப்பு;
ஒரு பட்டாம்பூச்சி போல, ஒரு குழந்தையாக இப்பூவுலகில் படைக்கபடுகிறது.