இதயத்தின் கீழடி!
இதயத்தின் கீழடி!
தொல்பொருள் ஆராய்ச்சியில் மட்டுமல்ல,
அனைவரின்
இதயத்தின் கீழடியில்
அகழ்வாராய்ந்தால் தான் தெரியும் நினைவலைகளோடு மறக்கடிக்கப்பட்ட
ஒவ்வொருவரின் இன்றைய
நவ நாகரீக வளர்ச்சிக்கு முன் புதைக்கப்பட்ட உண்மையான
முதல் காதலும்!
காதலோடு கலந்த சில முதல் முத்தங்களும்,
காற்றோடு கனவாக கலக்கப்பட்ட
சிற் சில குறிக்கோளும்,
நிறைவேறாத பற்பல ஆசைகளும்,
நண்பர்களோடு ஒன்றாக விளையாடிய விளையாட்டுகளும்,
நினைவில் நிலைத்து நிற்க கைப்பட எழுதிய ஸ்லாம் புத்தகங்களும்!
அன்று நாம் அனுபவித்த
பரீட்சை லீவும் பாட்டி வீடும்,
அந்த கிராமத்து ஆலமர காற்றும்,
ஆத்தாவும் தாத்தாவும் சொன்ன கதைகளும்.....
இன்றைக்கும் நம் மனதில்,
ஆட்டோகிராஃப் போட்டு செல்லும்!