ஹீரோ
ஹீரோ
அப்பா அருகில் நீ இல்லையென கலங்கிய காலங்கள்;
தண்ணீர் இன்றி செடி வாடியது போன்று;
உன்னோடு பயணித்த என் காலங்கள்;
மீண்டும் கிடைக்கப்பெறுமோ என ஏங்கிய நாட்கள்;
வறண்ட நிலத்தில் நீர்த்துளி விழுவது போன்று;
கண்ணிமைக்கும் நொடியில் காலங்கள் ஓடினாலும்;
காலத்தால் என்றும் அழியாத உன் கால் தடத்தை பின்பற்றி
வாழும் என் போன்ற பிள்ளைகளுக்கு என்றும் தன் அப்பாக்களே ஹீரோக்கள்!!!
