எண்ணங்களும் நினைவுகளும்
எண்ணங்களும் நினைவுகளும்
உள்ளத்தில் வாசம் செய்யும்
எண்ணங்களும் நினைவுகளும்
போட்டியிட்டே -
நம்மை ஆக்கிரமித்து அலைக்கழித்து
சிலையென சமைந்திடச் செய்யுமெனில்
அந்த எண்ணங்களுக்கும் நினைவுகளுக்கும்
கடிவாளமிட்டே - அவற்றை நாம் நம் கட்டுக்குள்
வைத்திடப் பழகி விட்டால்
கவலை என்ற ஒன்றிணையே
காத தூரம் விரட்டியே
நிம்மதியை துணையாய்க் கொண்டு
நலமாய் வாழ்ந்திடலாம் எந்நாளுமே !