எனக்கான கதவு அடைத்தே கிடக்கிறது
எனக்கான கதவு அடைத்தே கிடக்கிறது


உனக்கான பாய்
விரிக்கப்பட்டு விட்டது
கசங்குமா இல்லையா தெரியாது.
கசக்காமல் நான் காத்திருக்கிறேன்.
உனக்காக காத்திருக்கிறோம்
நானும் நான் விரித்த பாயும், தினம்தினம்.
நீ வருவாயா என்றறியாது
தினமும் விரிப்பதும் மடிப்பதுமாய்
போகிறது பொழுது.
மது வழியும் கோப்பைகள்
நுரை வழிய ஓரமாய்க் கிடக்கின்றன.
எனக்கான கதவை
கடவுள் ஏனோ அடைத்தே வைத்திருக்கிறான்.
ஒற்றையடிப்பாதையில் நீண்டு கிடக்கிறது மௌனம்
உடைக்க ஆளில்லாமல்.