என் இனிய உலகம்
என் இனிய உலகம்
என் அனைத்து முயற்சிக்கும் என்னை ஊக்குவிப்பவர்கள்,
இவர்கள் என் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கம்.
எனது தோல்வியில் துயரம் கொண்டு எனது வெற்றியில்,
அதீத இன்பம் கொள்பவர்கள் இவர்களில்லையெனில்,
நான் ஒரு பொழுதும் எந்த கடின சவால்களை நேர்காண இயலாது.
என் அன்பான அன்னையின் உகத்தலும்,
தந்தையின் கண்டிப்பான அறிவுரைகளும்,
தாத்தாவின் தட்டிக்குடுக்கும் வழிகாட்டுதலும்,
பாட்டியின் பக்குவமான நீதி கதைகளும்,
எனது வாழ்க்கையை சீராக்கி வெற்றி பாதையில்,
செல்ல வழிவகுத்தது என் உலகமும் இவர்கள்தான்
என் எண்ணம் சிந்தை செயல் அனைத்துமே இவர்களுக்காகத்தான்.
என் குடும்பம் எனது இனிய உலகம்!