STORYMIRROR

Siva Aravindan

Romance Tragedy

4  

Siva Aravindan

Romance Tragedy

சின்னஞ்சிறு கூட்டில்

சின்னஞ்சிறு கூட்டில்

1 min
209

உன் சின்னஞ்சிறு கூட்டில்,

தஞ்சம் அடைந்தது,

வாடி மடியாத உயிரொன்று,


வழித்துணை ஏதுமின்றி,

சிற்றோடையில் நெளிந்த மீன்களை போல்,

நெளிந்ததே மடியாத உயிரொன்று,


உன் சின்னஞ்சிறு கூட்டில்,

தஞ்சம் அடைந்தது,

வாடி மடியாத உயிரொன்று,


சிவந்த மேகமோ மறைந்தது,

மானுட பேய்களின்,

வஞ்சகத்திலும், பேராசையிலும்,


பார்வை இருந்தும்,

பார்வையற்றவனாய் இருந்தானே,

சிறைக்குள் இருக்கும் அந்த உயிரொன்று,


உன் சின்னஞ்சிறு கூட்டில்,

தஞ்சம் அடைந்தது,

வாடி மடியாத உயிரொன்று,


மலராய் உதிரந்தேனே,

பேசும் பேதையே,

உன்னை கண்டவுடன்,


உன் சின்னஞ்சிறு கூட்டில்,

வீடு புகுந்தது,

பூத்து குலுங்கிய மலரொன்று..


Rate this content
Log in

Similar tamil poem from Romance