அவர்கள்
அவர்கள்
காலமின்மையைக் காரணம் கூற
கூச்சமாய் தான் இருந்தது..
ஆனால் வேறென்ன செய்ய?
எனக்காய் காத்திருக்கும் அவர்களின்
கணங்களும் ரணங்கள் தானே..
“நிச்சயம் உங்களுக்காய் ஒரு நாள்!”
மீண்டும் வெற்று வாக்குக் கொடுத்தேன்..
தாண்டி செல்லும் போதெல்லாம்
என்னை வெறித்து பார்க்கும் அவர்களை..
#வாசிக்கப்படாபுத்தகங்கள்
