அடைபட்ட காலம் போதும்
அடைபட்ட காலம் போதும்
நான் பிறந்த நொடி முதல் நேற்று வரை ஆனந்தமாய் இருந்தேன்,
இன்று ஆனந்தம் நீங்கி தனிமையில் தவிக்கிறேன்,
ஏன் என்னக்கு மட்டும் இப்படி நிகழ்கிறது,
வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்விலும் எண்ணுடன் இருந்தவர்களை,
இப்போது ஒருவர் கூட என்னுடன் இல்லை,
அனைவரையும் பிரிந்து வாழ்வதை பழக முயற்சிக்கிறேன்,
இனி நான் விரும்பியதை செய்ய கூட பிறரின் அனுமதி தேவையாம்,
என் வாழ்வின் எந்த ஒரு முடிவையும் அவர்களின் முடிவை சார்ந்தே இருக்குமா,
இப்படி ஒரு கூண்டில் அடைக்க பட்ட பறவை போல வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டாம்,
மனதில் உறுதியுடன் அனைத்து சவால்களையும் மேற்கொண்டு வெற்றி பெறு புது மணப்பெண்ணே!