அரங்கேற்றம்
அரங்கேற்றம்
அன்புள்ள நாட்குறிப்பே,
மழை தந்த இனிய அனுபவம், இங்கே கவிதையாய்
துளித் துளியாய்
மெல்ல கீழிறங்கி
காற்றோடு கைகோர்த்து
ஆனந்த நடமாடி
மரங்களின் தலைகோதி
வழிநெடுக நலம் விசாரித்து
பொறுமையாய் மண்ணத் தழுவ
இதற்கெனவே தவம் கிடந்த
நிலமோ - பூரிப்பில்
மண் வாசனையை
சுகந்தமெனப் பரப்ப
மண்ணின் சுகந்தமும்
மழையின் தண்மையும்
கைகோர்க்க - ஆங்கோர்
இனிமைச் சூழலின் அரங்கேற்றம் !