அன்பும் துயரும்
அன்பும் துயரும்
சொல்லாத அன்பும்
பகிராத மன துயரும்
பாரமாய் மாறியே
மனதை அழுந்தி
நிலைகுலையச் செய்யுமே !
அன்பினை பகிர்வோம் -
அது பன்மடங்காகவே
பல்கிப் பெருகட்டுமே !
துயரங்களை பகிர்வோம் -
அவை நம்மை விட்டு விலகியே
மனதும் தான் இலேசாகட்டுமே !
வாழ்வில் தான் -
எதுவும் நிரந்தரமில்லையே !
இது உணர்ந்தால் தான்
வாழ்வின் சாரமும் விளங்குமே !