செக்யூரிட்டி கார்டு
செக்யூரிட்டி கார்டு
அந்த பெண்கள் விடுதிக்கு சரவணன் தான் காவலாளி.அவரை மீறி யாரும் உள்ளே போக முடியாது,வெளியிலும் போக முடியாது.கடமையில் கண்ணாக இருப்பார்.
அவருக்கு இரவு பகல் என்று மாறி மாறி டுட்டி வரும்,சளைக்காமல் செய்வார்.அவருடைய நேர்மையை கடமை உணர்வை எல்லோரும் பாராட்டி வந்தனர்.
அன்று பகலில் அவர் தான் டுட்டி.
சுமார் பத்து மணிக்கு,ஓர் பெண்மணி அவரை நோக்கி வந்தார்.வந்ததும் அவரிடம் தன்னுடைய மகள் விஜயாவை பார்க்க வேண்டும்,மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி என்றும் கூறினார்.
அதற்கு சரவணன் இப்போது பார்க்க முடியாது.வகுப்பிற்கு சென்றுள்ளார்கள்,உணவு இடைவேளையில் தான் பார்க்க முடியும்.ஆனால் அடையாள அட்டை கொண்டு வந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சொன்னார்.அப்போது அந்த பெண்மணி சிறிது கலக்கம் அடைந்தார்.கேட்டுக்கு வெளியே அந்த பெண் வந்த ஒரு ஆம்னி வேன்
மூன்று ஆடவருடன் காத்து இருந்தார்கள்.அதை சரவணன் ஆரம்பத்தில் கவனித்து விட்டார்.உணவு இடைவேளையில்
விஜயா என்ற மாணவியை அழைத்து அவளை தேடி அம்மா வந்து இருப்பதாக கூற,விஜயா ,அதற்கு அந்த மாணவி எனக்கு அம்மா இல்லை,வந்தவரை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு,அவரை தனக்கு தெரியாது என்று கூறி விட்டு உணவு அருந்த சென்று விட்டாள்.
சந்தேகம் அடைந்த சரவணன் வந்த பெண்ணை கல்லூரி அலுவலகத்திற்கு ஒன்றும் சொல்லாமல் அனுப்பி வைத்தார்.அந்த பெண்ணுக்கு தெரியாமல் அந்த பெண்ணை பற்றிய விவரம்,அந்த பெண்ணின் நடவடிக்கை போன்ற விவரங்களை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
அலுவலகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் துறை வந்து அந்த பெண்ணை விசாரிக்க,அந்த பெண் ஒரு கடத்தல் கும்பலை சேர்ந்தவள் என்று கண்டு பிடித்து காவல் துறை அந்த பெண்ணை
சிறையில் அடைத்தனர்.
சமயோசிதமாக செயல் பட்ட சரவணன் காவல் துறையினர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.
