வயிற்றில் ஆணா ? பெண்ணா ?
வயிற்றில் ஆணா ? பெண்ணா ?
அது ஒரு சிறிய மருத்துவமனை வளாகமாக இருந்தது...
அங்கே ஸ்கேன் செய்யும் பகுதி பின்புறம்.... இரகசியமான பேச்சு சத்தம் கேட்டு கொண்டு இருந்தது...
"இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தா போதுமா... இல்ல இல்ல... உன் காசை நீயே வச்சிக்க தம்பி... எனக்கு இதெல்லாம் சரி பட்டு வராது... விலைவாசி எல்லாம் ஏறிக் கிடக்கு... இப்ப போய் இதை குடுத்தா... ஹ்ம்ம் நீ ஐயாயிரம் எல்லாம் தர மாட்ட... ம்ஹும் நீ கிளம்பு மொதல்ல... இடத்தை காலி செய்..." என்று சொல்லி கொண்டு இருந்தான் ஒரு நடுத்தர வயதில் உள்ளவன்...
"ஐயாயிரம் எல்லாம் முடியாது... சரி இந்தா மூவாயிரம் வச்சிக்க..." என்று சொல்லி... அந்த பணத்தை அவன் கையில் தினித்தான் பிரபாகரன்...
"இல்ல முடியாது... நீ நாலாயிர ரூபாய் ஆச்சு குடு..." என்று கறாராக கூற...
மேலும் ஒரு ஐநூறு ரூபாயை அவன் கையில் தினித்து...
"இதுக்கு மேல என் கிட்ட காசு இல்ல... இப்பயாவது சொல்லு சாமி... என் பொஞ்சாதிக்கு ஸ்கேன் பண்ணிங்க இல்ல... அதில் இருப்பது ஆணா இல்ல இதுவும் பொட்ட புள்ளையா..." என்று கடுப்புடன் வினவினான் பிரபாகரன்...
"இந்த முறை கூட உன் பொண்டாட்டி வயித்துல இருக்கும் சிசு பொண்ணு தான்... உன் பொண்டாட்டிக்கு ஆண் பிள்ளைக்கு ராசியே இல்ல போல..." என்று சொல்ல அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது...
அந்த ஸ்கேன் செய்பவனிடம் எதுவும் சொல்ல முடியாமல்... பல்லை கடித்து கொண்டு அமைதியாக வெளியே வந்தான் பிரபாகரன்...
'ச்சே... இதுவும் பெண்ணா போச்சே... இதே மாதிரி தான் அவள் வயிற்றில் வளர்ந்த கரு... பொண்ணு என்று தெரிஞ்சி... இந்த ரெண்டு வருஷத்தில்... ரெண்டு கருவை கலைச்சி... காசு செலவு ஆனது தான் மிச்சம்... இப்ப மூணாவதா உருவாகி இருப்பதையும் கலைச்சி ஆகனும்... அதுக்கு வேற தண்ட செலவு பண்ணனும்... இதுவே... ஆண் வாரிசா இருந்து இருந்தால்... நான் எவ்வளவு சந்தோஷப் பட்டு இருப்பேன்... ச்சே... இதில் நான் அவளை உருகி உருகி காதலிச்சு வேற கல்யாணம் கட்டிக் கிட்டேன்...' என்று மனதில் நினைத்து சலித்து கொண்டான் பிரபாகரன்...
பிறகு... ரம்யா இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான் பிரபா...
"என்னங்க... ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கவா இவ்வளவு நேரம் உங்களுக்கு...' என்றால் ரம்யா...
"இல்ல ரம்யா... அவங்க தான் லேட் பண்ணிட்டாங்க... என்ன உனக்கு டயர்டா இருக்கா..."
"ம்ம் ஆமா பா... ரொம்ப..."
"சரி வா... போய் டாக்டரை பார்க்கலாம்..."
"எனக்கு பயமா இருக்கு பிரபா..."
"ஏன் டி பயம்..."
"இல்ல இந்த முறையும் பாப்பா அபாட் ஆகிடுச்சு என்றால் என்ன பண்றது..." என்று சொல்லும் போதே அவளின் கண்கள் குளம் ஆகியது...
'ஹ்ம்ம்... இந்த முறையும் அது கலைஞ்சி தான போக போகுது...' என்று நினைத்த பிரபாகரன்...
ரம்யாவிடம்... "அது எல்லா ஒன்னும் ஆகாது... நீ இப்ப வரப் போறியா இல்லையா..." என்று கத்தினான் பிரபா...
"நான் ஒன்னும் அழலை டா... வா போகலாம்..." என்று சொல்லி உள்ளே போனால் ரம்யா...
டாக்டரிடம் சென்று ஸ்கேன் ரிப்போர்ட்டை காட்ட...
"ரம்யா... இப்ப நீ ரொம்ப வீக்கா இருக்க... அதனால் உனக்குள் இருக்கும் குழந்தையை ரொம்பவே ஜாக்கிரதையா பார்த்துக்கணும்... புரியுதா... உன் குழந்தை உள்ள ஆரோக்கியமாக தான் இருக்கு..." என்று டாக்டர் சொல்ல...
"ரொம்ப நன்றி டாக்டர்..." என்று சொல்லி கரம் கூப்பினாள் ரம்யா...
"எங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருடம் ஆக போகுது டாக்டர்... இதில் இரண்டு வாட்டி நான் கற்பமாக இருந்தேன்... ஆனால்... என் விதி... கன்பார்ம் ஆனது தெரிஞ்ச ஒரு வாரத்திலேயே என் கரு கலைந்து போயிடும்... ரொம்ப தேதனையா இருக்கும் டாக்டர்.... இதை நினைத்து நினைத்து எவ்வளவு நாள்... நான் அழுது இருக்கேன் டாக்டர்... இவரு நான் கஷ்ட படுவேன்னு நினைச்சி... எனக்கு துணை இருந்து... எனக்கு ஆறுதல் சொல்லிட்டு இருப்பார்... ஆனால்... இவருக்கும் உள்ளுக்குள்ள குழந்தை ஆசை இருக்க தானே செய்யும் டாக்டர்... இவர் ஆசையை நான் நிறைவேற்றி விட்டா... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்... இந்த குழந்தையை பெத்து இவர் கிட்ட தரணும்... அப்போ தான் எனக்கு நிம்மதி டாக்டர்..." என்று கண்ணீர் மல்க பேசினாள் ரம்யா...
"சரி ரம்யா... விடுங்க... நீங்கள் ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க... எல்லாம் நல்லாதா நடக்கும்... நீங்க மட்டும் கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க..." என்று டாக்டர் சொல்ல...
ரம்யாவும் சரி என்று சொல்லி வெளியே போய் அமர்ந்து கொண்டாள்...
ரம்யா வெளியே சென்றதை உறுதி படுத்திக் கொண்டு....
"டாக்டர் இந்த முறையும் அவள் வயிற்றில் வளர்கிறது பெண் குழந்தையாமே... அதனால்... ரம்யாவுக்கு கரு கலைப்பு மருந்தை சேர்த்து கொடுத்து விடுங்கள்..." என்று சொன்னான் பிரபாகரன்...
"தர முடியாது..." என்றார் அந்த டாக்டர்...
"என்ன டாக்டர் நீங்களே இப்படி சொல்றீங்க... நான் காசை கொஞ்சம் கூட போட்டு தரேன் டாக்டர்...." என்று பதறி போய் சொன்னான் பிரபா...
"இந்த முறையும் உன் பொண்டாட்டியின் கருவை மாத்திரை கொடுத்து கலைத்தால்... அது அவள் உயிருக்கே ஆபத்து... என்னால இதை செய்ய முடியாது..." என்று முடிவாக சொல்லி விட்டார் டாக்டர்...
"என்ன டாக்டர்... இப்ப மட்டும் நல்லவங்க மாதிரி பேசிட்டு இருக்கீங்க... என் கிட்ட பணம் வாங்கிட்டு தானே மருந்தை குடுத்தீங்க... இப்பவும் நான் பணத்தை தரேன்... அந்த குழந்தை கலைத்து விடுங்க..."
"வாயை அடக்கி பேசு... நான் ஒன்னும் உன் பணத்துக்காக அந்த சிசுவை கலைக்க மருந்து கொடுக்கலை... உன்னை மாதிரி ஒருத்தனுக்கு மகளா பிறந்து... தினம் தினம் அந்த பிள்ளைகள் சித்திரவதை அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்து தான்... நான் குழந்தையை அபாட் பண்ண சம்மதம் சொன்னேன்... நீ குடுத்த பணம் எல்லாம் அனாதை இல்லத்தில் உள்ள ஒரு பெண் குழந்தை படிப்பு செலவுக்கு தான் போச்சு... அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்..." என்று கோபமாக சொன்னார் அந்த டாக்டர்...
"என் பொண்டாட்டி வயித்துல இருக்கும் பெண் சிசுவை கலைச்சி விடுங்க ன்னு சொன்னால் என்ன என்னமோ பேசிட்டு இருக்கீங்க..."
"ரம்யா பிள்ளைக்காக கஷ்ட பட்டு... குழந்தைக்காக ஏங்குவது கூட உன் கண்ணுக்கு தெரியலையா... இதில் நீ அவளை காதலித்து வேற திருமணம் செய்து இருக்கீயாம்... ச்சே... என்ன மனுஷன் நீ..."
"பரவாயில்லை டாக்டர்... நான் மனுஷன் இல்லை தான்... விட்டுடுங்க.... எனக்கு என் ஆண் குழந்தை தான் முக்கியம்..."
"என்னால ரம்யாவின் குழந்தையை கலைக்க முடியாது..."
"நீ இல்ல என்றால் என்ன... நான் அவளை வேற டாக்டர் கிட்ட போய் அந்த குழந்தையை கலைச்சிப்பேன்..." என்று சொல்லி பிரபாகரன் திரும்ப....
அங்கே ரம்யா நின்று கொண்டு இருந்தாள்...
"ர... ரம்யா... நீ... நீ எ...ப்ப... வந்த..." என்று முகமெல்லாம் வேர்த்து விறு விறுக்க சொன்னான் பிரபாகரன்...
"ச்சீ... என் பெயரை சொல்லாத..."
"அது இல்ல டி..." என்று சொல்லி அவளிடம் நெருங்கினான் பிரபா...
"கிட்ட வராதே... என் கிட்ட வந்திராத..." என்று கத்தினாள் ரம்யா...
"அது அது வந்து... நான்..."
"போதும் நிறுத்து... எப்படி டா உனக்கு உன்னுடைய குழந்தையவே கொல்ல மனசு வரும்... வயிற்றில் இருந்த குழந்தை உனக்கு என்ன டா பாவம் பண்ணுச்சு... என் குழந்தையை எதுக்கு டா கொன்ன... அது பெண் என்ற ஒரே காரணத்துக்காக கொலை நினைச்சி இருக்கீயே... நீயெல்லாம் எதுக்குடா உயிர் வாழ்ந்துட்டு இருக்க... பாவி... செத்து விடு... செத்து போ..." என்று சொல்லி அழுதாள் ரம்யா...
"ஏய் என்னடி ஓவரா பேசிட்டு இருக்க..."
"உன்ன போய் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேனே... உன் மேல ஆசைப் பட்ட என் மனசை சொல்லணும்..." என்று தலையில் அடித்து கொண்டு கதறினாள் ரம்யா...
"ஏய்... இப்ப இந்த பொட்ட குழந்தையை கலைக்க போறியா இல்லையா..." என்று சொன்னவனை காளி தேவியாக மாறி போய் பார்த்தால் ரம்யா....
எப்போதும் காதல் பார்வை பார்க்கும் மனைவி... இன்று அவள் அப்படி ருத்ர தேவியாக பார்க்க... நடு நடுங்கி தான் போய் விட்டான் பிரபாகரன்...
அவனுடைய சட்டையை பிடித்து நாலு அறையை அறைந்தால் ரம்யா......
"ஏண்டா... உன்னை பெத்து போட்டு... உன்னை ஆளாக்க ஒரு பொண்ணு தான்... உன்னை சீராட்டி பாராட்டி வளர்க்க ஒரு பொண்ணு வேணும்... கண்டவன் வீட்டு பொண்ணை சைட் அடிக்க ஒரு பொண்ணு வேணும்... உனக்கு காதலிக்க ஒரு பொண்ணு வேணும்... உன்னை கல்யாணம் பண்ணி உன் கொடுமை எல்லாம் தாங்கிக் கிட்டு உன் கூட குடும்பம் நடத்த ஒரு பொண்ணு வேணும்... நீ எப்போ எல்லாம் கூப்பிடறியோ அப்ப எல்லாம் பொண்டாட்டி என்ற உரிமையில் உன் உடல் தேவையை தீர்த்துக்க ஒரு பொண்ணு வேணும்... இது எல்லாத்துக்கும் உனக்கும் இந்த கேடு கெட்ட சமுகத்துக்கும் பெண்கள் தேவை... ஆனா.... உனக்கு ஒரு பொண்ணு பிறந்தால்... அதை ஏத்துக் கிட்டு வளர்க்க உனக்கு கசக்குதா... எனக்கு கல்யாணம் ஆனா இந்த ரெண்டு வருஷத்துல எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கேன் தெரியுமா... மத்தவங்க கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் அப்படியே ஊசி முனையில் நிற்கிற மாதிரி இருக்கும்... என்ன இவ்ளோ நாளா உனக்கு குழந்தை இல்லையா அப்படி ன்னு கேட்டு... என்னை எல்லாரும் ஒரு பார்வை பார்ப்பாங்க பாரு.... அப்போவே தோணும்... அய்யோ இதுக்கு பதிலாக செத்தே போயிடலாமே ன்னு... அதெல்லாம் மரண வேதனை... அப்படி இல்லாட்டியும் கூட... இல்லங்க... எனக்கு ரெண்டு குழந்தை கலைஞ்சி போச்சின்னு சொன்னால்... அதுக்கு வேற எவ்வளவு வசை பாடுவார்கள் என்று தெரியுமா... உனக்கு இந்த குறையோ... இல்ல அந்த குறையோ... நீ என்ன பாவத்தை பண்ணியோ... அதனால தான்... இப்படி எல்லாம் உனக்கு நடக்குது போல... இன்னும் எவ்ளோ வசவு பேச்சு எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கும் தெரியுமா... உனக்கு எப்படி தெரியும் நீ தான் ஆம்பளை ஆச்சே... என் குழந்தை செத்து போனதுக்கு காரணமே நீ மட்டும் தான்... அதுக்கு காரணம் நீ தான் என்பதே... எனக்கு இப்ப தான் தெரிஞ்சு இருக்கு.... இது தெரியாமல் இவ்வளவு நாளாக... கேனச்சி மாதிரி உன் கிட்டயே அழுது புலம்பி... உனக்கு பொண்டாட்டியாவே இருந்து இருக்கேன் பாரு... அதை நினைக்கும் போது என் உடம்பு எல்லாம் கூசுது... என் வயிறு பத்தி எரியுது... இதுக்கு மேல நான் உனக்கு பொண்டாட்டியா இருந்தால்... நான் ஒரு பொண்ணே கிடையாது... இனி... எனக்கு என் வயிற்றில் இருக்கும் பொண்ணு போதும்... இனிமேல் நான் உனக்கு பொண்டாட்டியும் கிடையாது... நீ எனக்கு ரொம்ப புருஷனும் கிடையாது... என் பொண்ணை நான் ஒத்தையா வளர்த்து... பொக்கிஷமா பார்த்துக்க எனக்கு தெரியும்... இனி நீ என் கண்ணு முன்னாடி வந்து விடாதே..." என்று சொல்லி... பிரபாகரனை தள்ளி விட்டுட்டு போனால் ரம்யா...
அவன் அப்படியே ஜடம் போல நின்றான் பிரபாகரன்...
இரண்டடி முன்னே போன ரம்யா... மீண்டும் திரும்ப வந்து...
"நீ பண்ணதுக்கு எல்லா நான் எதுக்கு உனக்கு இப்ப தண்டனை கொடுக்காமல் போறேன் தெரியுமா... உன் மேல புருஷன்னு பாவப்பட்டு எல்லாம் கிடையாது..." என்று சொல்லிய ரம்யா அவள் வயிற்றில் கை வைத்து...
"என் வயிற்றில் வளரும் என் பொண்ணை நான் நல்ல படியாக வளர்த்து... அவளை உன் மூஞ்சியில் த்தூ ன்னு காரி துப்ப வைப்பேன்... உனக்கான தண்டனையை என் மகள் தான் கொடுப்பால்..." என்று சொல்லி விட்டு...
பிரபாகரனை திரும்பி பார்க்காமல்... அவளுடைய மகளின் வாழ்கையை நோக்கி... வீர நடை போட்டால் ரம்யா....
*******
இந்த சம்பவம் இப்ப அதிகமாக நடப்பது இல்லை என்றாலும்... அங்கங்கே இன்னுமும் நடக்க தான் செய்யுது...
அப்படி பெண் குழந்தையை கருவில் கலைக்க வில்லை என்றாலும்... பெண் குழந்தையை எங்கும் போக விடாமல்... நாலு சுவருக்கு உள்ளே இருக்க வைப்பதும்... பெண்களுக்கு படிப்பு எதுக்கு ன்னு சொல்வதும்... குழந்தை திருமணம் செய்து வைப்பதும்... நிஜமாகவே இன்னும் நடந்து கிட்டு தான் இருக்கு... அதை யாராலும் இல்லை என்று சொல்லவே முடியாது...
ஆனால்... இப்ப இருக்கும் ஆண்கள் பெரும்பாலும்.. தங்கள் மகள்களை இளவரசியாக தான் பார்த்து... அவங்களுக்கு பிடிச்சதை பார்த்து பார்த்து செய்றாங்க...
இப்ப எல்லாம் வீட்டில் அம்மாக்கள் தான் பாகுபாட்டை காட்டுறாங்க... மகனை மட்டும் உசத்தியா பார்க்கிறாங்க 😔😔
இது யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் மக்களே.. எனக்கு இப்படி எழுத தோணுச்சு... அதனால் மட்டுமே எழுதினேன்...
நன்றி செல்லம்ஸ் 🤩
Urs.....
Kani 😍🙈