Saravanan P

Action Fantasy Thriller

4  

Saravanan P

Action Fantasy Thriller

வாள் வீரன்

வாள் வீரன்

2 mins
276


நாகை,ஒரு கிராமத்தில்,அதிகாலை 04:00 மணி

மக்கள் அனைவரும் ஊர் திருவிழாக்காக மும்மரமாக வேலை பார்க்க கண்ணாடி அணிந்து கொண்டு வந்தியன் அந்த ஊருக்குள் பையுடன் பிரவேசித்தான்.

ஊர் மக்களிடம் வழி கேட்டு கொண்டு தன் தங்க போகும் வீட்டிற்கு சென்றான்.

ஆர்காயலஜிஸ்ட் ஆன வந்தியன் தன் கல்லூரி ஆக்டிவிட்டி காரணமாக ஒரு புராதானமான கல்வெட்டை தேடி வந்தான்.

திருமால் கோயில் திருவிழாவில் எல்லா ஊர் மக்களுக்கும் சமைக்கும் வேலையை ஒரு முஸ்லிம் நபர் செய்தார்.

கிறிஸ்துவர்கள் அந்த திருவிழாவிற்கு சிறு சிறு வேலைகள் செய்து தர மத நல்லிணக்கம் வேரூன்றி இருந்தது.

திருவிழாவின் முதல் நாள்‌‌ வந்தியன் தனக்கு கிடைத்த தகவல்படி ஊரின் பாறைமேடு பகுதிக்கு நான்கு கடப்பாரை வேலை செய்யும் ஆட்களுடன் சென்று ஒரு இடத்தை காட்ட அங்கு கல்லை உடைக்க தொடங்கினர்.

இந்த தகவல் வந்தியனுக்கு அவன் ஆசிரியர் கொடுத்தது.

கல்லை உடைக்க உடைக்க உள்ளே ஒரு சுரங்க வழி கிடைத்தது.

அந்த வழியை கல்லை வைத்த மூடியிருக்க வேண்டும் என நினைத்தபடி வந்தியன் அங்கு இருவரை மட்டும் மேலே நிற்க சொல்லி விட்டு உள்ளே கயிற்றை போட்டு இறங்கினான் வந்தியன்.

செல்ல செல்ல பாறை வழி குறுகி கொண்டே வந்தது.

ஒரு இடத்தில் சிங்கம் சிலை ஒன்று இருந்தது அதன் மேலே தண்ணீர் சொட்டி கொண்டிருந்தது.


அந்த சிங்கத்தின் உடலுடன் சேர்த்து ஒரு கல் வடிவ பெட்டி இருந்தது.

அந்த பெட்டியின் முகப்பை தன் மட்டும் கொண்டு வந்தியன் தூக்கி அங்கு தள்ளி வீசினான்.

அங்கு இறந்த பாம்புகள் சுற்றிய படி ஒரு கத்தி இருந்தது.

கையில் களவுஸ் மாட்டி கொண்டு பாம்புகளின் அழுகிய உடலை எடுத்து தூர போட்டுவிட்டு மேலே எழுந்து வந்தான்.

பின்பு மேலே வந்த வந்தியன் அந்த இரு நபரை கொன்று அந்த கத்தியால் கொன்று விட்டு மீதம் இருந்தவர்களை அங்கு இருந்த மீதி இருவரை பக்கம் இருந்த குளத்தில் போட்டு கொன்றான்.

அவன் சிரித்த சிரிப்பு அங்கு மர கூட்டில் இருந்த பறவைகளுக்கு திகிலை கொடுத்தது.


வந்தியன் இந்த கத்தியை பெரிய விலைக்கு விற்பதற்கு முன் அதில் உள்ள அதிசய சக்தி ஒன்றை எடுக்க விரும்பினான்.

அதற்குரிய மந்திர வரிகள் ஊரின் நடுவே உள்ள மரத்தின் அடியில் ஓலையில் புதைக்கப்பட்டு இருந்தது.

அந்த கோயிலில் சிறு சிறு திருட்டு வேலைகள் திருவிழா நேரத்தில் செய்து வந்த சுப்பு அந்த மரத்தின் கீழ் தன் காதலியை பார்க்க காத்திருந்தான்.

அவளிடம் இனி திருட போவதில்லை என்று சத்தியம் செய்து விட்டு நெல் சேகரிப்பு மையத்தில் வேலைக்கு சேர்ந்ததை அவளிடம் பேசி விட்டு அங்கு நின்றுகொண்டிருந்தான் அவன் காதலி சென்று விட்டாள்

அப்பொழுது அவசரமாக அங்கு வந்த வந்தியன் சுப்பை தலையில் ஓங்கி அடித்து விட்டு ஓலையை தேட ஆரம்பித்தான்.

அரை மயக்கத்தில் இருந்த சுப்பு அவன் ஓலையை தூசி தட்டி கொண்டிருப்பதை பார்க்கிறான்.

பின்பு அவன் வீட்டுக்கு செல்வதை பார்க்கிறான்.

பின் தொடர்ந்து செல்லும் சுப்பு அவனை பின்புறம் பாய்ந்து தாக்க செல்ல வந்தியன் நகர்ந்து சென்று அவனை முகத்தின் குத்தினான்.

வந்தியன் ஓலையை பிடித்து கொண்டு கத்தியை புடித்தபடி அந்த ஓலையை படிக்க தொடங்க சுப்பு எழுந்து வந்து அந்த கத்தியை அழுத்தி பிடிக்க கத்தி இரண்டாக சில நேரத்தில் உடைந்தது.

இருவரும் தங்கள் உடலில் புது பலம் வந்ததை உணர்ந்தனர்.

இருவரும் சண்டை பிடிக்க தொடங்கினர்.

வந்தியன் முஷ்டியால் சுப்புவை குத்த,சுப்பு தன் காலால் வந்தியனை உதைக்க இருவரும் சில அடிகள் பின்னே சென்றனர்.

வந்தியன் முன்னே ஓடி வந்து தன் இரு கைகளால் சுப்புவை இடைவிடாது உரக்க கத்தியபடி குத்தினான்.

சுப்பு தன் ஒரு கையால் வந்தியனின் வயிற்றில் குத்தி அவன் கழுத்தை முறித்து அங்கு இருந்த குளத்தில் போட்டான்.

சிறிது நேரம் கழித்து தாரை தப்பட்டையுடன் ‌‌மக்கள் நடனமாடி கொண்டே வர அந்த கூட்டத்துடன் கலந்து சுப்பு ஒரு நாயகனாக சென்றான்.

 குளத்தில் மேலே காற்று குமிழிகள் தெரிய உள்ள இருந்து வந்தியனின் தலை மெல்ல வெளி வந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Action