பராக் பராக்
பராக் பராக்
கற்களால் உறுதி குலையாமல் நின்ற அந்த கோட்டை வீர தேசத்தின் கம்பீரத்தை பறை சாற்றியது.
மதில் முழுதும் வீரர்கள் வில் அம்பு மற்றும் ஈட்டி எந்தியபடி நின்று இருந்தனர்.
அப்பொழுது கோட்டை மீது பறந்து சென்ற கழுகு எதிரி நாட்டின் தளபதி கையில் சென்று அமர்ந்தது.
அந்த கோட்டையின் அகழி வழியே இருந்து பயணித்தோமானால் ஒரு காடு வரும் அந்த பகுதியில் எதிரி நாட்டின் ஒரு படை பகுதி காத்து இருந்தது.
இன்னொரு படை கோட்டையை சுற்றி வளைக்க திட்டம் இட்டது.
கோட்டை உள்ளே இருந்த மக்கள் தத்தம் வீட்டினுள் செல்லும்படி கட்டியக்காரர்கள் உரத்த குரலில் கூறியபடி சென்றார்கள்.
வீர தேசத்து மந்திரி பொன்னுகன்னு மீசையை முறுக்கியபடி தளபதிகளுக்கு கட்டளையிட அங்கு கொலுசு சத்தம் கேட்டது.
இளவரசி ஆதிரா முகம் நிறைய கோபம் குடி கொள்ள வீரர்களுடன் நடந்து வந்தாள்,பக்கத்தில் ஒற்றர் படை தலைவன்,வைத்தியர் இருக்க பொன்னுகன்னு பயந்து ஓட யத்தனிக்க வீரர்கள் அவரை பிடித்து மண்டியிட வைத்தனர்.
அரசர் படையுடன் வேறு நாட்டிற்கு போரிட சென்ற நிலையில் இளவரசர் அரசை நிற்வகித்தார்.
பொன்னுகன்னு எதிரி நாட்டுடன் கைகோர்த்து ஒற்றர் தலைவன் கொண்டு வந்த செய்தியை சொல்லவிடாமல் செய்து ,இளவரசரருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து அவர் பொறுப்பை எடுக்க பார்த்தான்.
இளவரசி ஒற்றர் தலைவன் செய்தியை கேட்டு திட்டஙகள் யோசிக்க தொங்கிய நேரம் இளவரசர் நிலை அறிந்து வைத்தியரை வைத்து சோதித்து உண்மையை கண்டுபிடித்தார்.
மந்திரியை விசாரித்து விட்டு கோட்டை வெளி மதில் கொண்டு போய் நிறுத்திய வீரர்கள் எதிரி தளபதி பார்த்து கொண்டிருக்கும் போதே கோட்டை அகழியில் தள்ள விட அதில் இருந்த முதலைகள் மந்திரியை புசித்தது.
எதிரி தளபதி சுற்றி வளைத்து கோட்டையை தாக்கி உள்ளே இருந்து தாக்குதல் பலமாக வெளியில் இருந்த எதிரி படையை தடுத்து வந்தது.
இளவரசி ஒரு படை பிரிவை ரகசிய சுரங்கம் வழியாக கோட்டையின் இரு திசைகளில் இருந்த படையை தாக்க உள்ளே இருந்த வீரர்கள் மீதி இரு திசையில் தாங்கினார்கள்.
பின்பு திட்டப்பபடி மீதம் இருந்த அந்த எதிரி படையை சுரங்கம் உள்ளே வர வைத்து நீரை திறந்து விட்டு மூழ்கடித்தனர்.
தற்போது கோட்டையின் உள்ளே சிறு படை மட்டும் வைத்து விட்டு மீதம் இருந்த படை வெளி வந்து எதிரி படையை துவம்சம் செய்ய அதற்கு இளவரசி ஆதிரா தலைமை தாங்கி வந்தாள்.
ஆதிராவும் எதிரி படை தளபதியும் குதிரை மீது இருந்து தாக்கி கொண்டனர்.
ஆதிரா தன் வலது கையில் கத்தி சுழற்றியபடி இடது கையால் ஈட்டியை எடுத்து எதிரி தளபதியின் வயிற்றில் பாய்ச்சினாள்.
ஆ... எனும் அலறல் சத்தம் போட்டு எதிரி தளபதி கீழே விழ அவன் அருகே செல்லும் ஆதிரா தன் கத்தியால் அவன் நெஞ்சை அறுத்து வெளியே எடுத்து எறிந்து விட்டு அவன் தலையை வெட்டி காலில் போட்டு மீதித்தாள்.
அந்த ரத்தத்தால் கையை நினைத்து விட்டு எதிர்க்க அவளை நோக்கி வந்த வீரர்களை நோக்கி குதிரையில் இருந்த தன் கேடயங்களை எடுத்து கொண்டு நடந்து சென்றாள்.
எதிரி படை சின்னாபின்னமாகி சிதறி ஓடியது.
ஆதிரா பேய் சிரிப்பு சிரித்தாள்.
ஒரு மாதம் கழித்து,
வீர தேசத்தின் மகாராணியாக ஆதிரா முடி சூடுவார் என குருமார் கூற ஆதிரா கையில் வாளுடன் கம்பீரமாக நடந்து வர அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர்.
