Arul Prakash

Action Crime Thriller

4  

Arul Prakash

Action Crime Thriller

ஒத்தைக்கு ஒத்த

ஒத்தைக்கு ஒத்த

9 mins
460


ஒரு ரவுடி பேரு ராமர், வயசு 60. இவருக்கு நிறைய எதிரி இருகாங்க. இப்போ இவரோட கதையை பார்ப்போம். ராமர்க்கு பாதுகாப்புக்கு ஒரு குரூப் அவர் கூட இருக்கும், அது மட்டும் இல்லாம, கொலை, கடத்தல் போன்ற மற்ற வேலைக்கு ஒரு குரூப் இருக்கு, அந்த குரூப்க்கு தலைவன் ரஞ்சித், இவன் ராமர்கிட்ட 12 வருஷமா இருக்கான். ராமர பொறுத்த வரை இவன் ஒரு கெட்டிக்காரன்.

ரஞ்சித் to ராமர் : அண்ணா உங்கள பாக்க ஒருத்தன் காலையில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கான்.

ராமர் : வர சொல்லு.

ராமர் to அந்த பையன் : யாருப்பா நீ.

அந்த பையன் : உங்கள பாக்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன், ராமசாமி உங்கள பாக்க சொன்னாரு.

ராமர் : ஓ அந்த பையனா நீ, இங்க வெட்டு,குத்து,கொலை போல வேல தான் இருக்கும். பருவா இல்லையா.

அந்த பையன் : பருவால சார்.

ராமர் : உன் பேரு.

அந்த பையன் : ராக்கி.

ராமர் : சரி ராக்கி, நீ இங்கயே இருக்கலாம்.

ராமர் to ரஞ்சித் : டேய் இவன உங்க கூட சேர்த்துக்கோ.

ரஞ்சித் : சரி அண்ணா.

ரஞ்சித் to அவனோட குரூப் : டேய் இவன் தான் புதுசா வந்து இருக்கான் டா. (ராக்கிய அறிமுகம் படுத்துறான் ).

ரஞ்சித்தோட குரூப்ல எல்லாரும் உட்கார்ந்துட்டு இருக்காங்க, அத பாத்துட்டு ராக்கி உட்கார போறான், ரஞ்சித் அங்க இருந்து ஒரு முறை முறைக்கிறான், உடனே ராக்கி உட்காரமா எழுந்து, கைய கட்டி நிக்குறான்.

ரஞ்சித் to ராக்கி : டேய் அது என்ன பேரு ராக்கி.

ராக்கி : முழு பேரு ராதாகிருஷ்ணன், சுருக்கி, ராக்கின்னு வச்சுக்கிட்டேன்.

ரஞ்சித் : இவன் பரிசல் கிருஷ்ணா, பக்கினு சுருக்கிடுலமா.

ரஞ்சித் குரூப் எல்லாரும் சிரிக்கிறாங்க.

ரஞ்சித், சதிஷ்ன்னு ஒருத்தன கூப்பிட்டு, சிகெரட் வாங்கிட்டு வர சொல்றான், அவன் வாங்கறதுக்கு, கொஞ்சம் தூரம் போய்ட்டான்.

ரஞ்சித் to சதிஷ் : டேய் நீ வந்துரு.

சதிஷ் : ஏன் னா.

ரஞ்சித் : புதுசா வந்து இருக்கானே ராக்கி அவன் வாங்கிட்டு வருவான்.

ராக்கி இதெல்லாம் பாத்துட்டு இருக்கான்.

ரஞ்சித் to ராக்கி : டேய் போய்ட்டு, சிகெரட் வாங்கிட்டு வா.

ராக்கி : அதென்ன பாதி தூரம் போனவன, கூப்பிட்டு வர சொல்லிட்டு, என்னை போய் வாங்கிட்டு வர சொல்றிங்க.

ரஞ்சித் : அதெல்லாம் அப்படி தான், இந்த காலேஜ் பசங்க லாம் பண்ணுவாங்களே, raping, அது மாதிரி தான் இது.

சதிஷ் : நா அது raping இல்ல, ragging.

ரஞ்சித் : அது தான் டா.

ராக்கி ரஞ்சித்த முறைக்கிறான்.

ரஞ்சித் : என்ன டா முறைக்கிற.

ராக்கி முறைச்சிட்டே இருக்கான்.

ரஞ்சித் அடிக்க போறான், அவனோட குரூப் புடிச்சிடுறாங்க.

அப்பறம் அமைதி ஆயிடுறாங்க.

ராமர் to ரஞ்சித் : டேய் ஒருத்தன், நம்ம ஏரியால ரவுடியாட்டம் ஓவரா சீன் போட்டுட்டு இருக்கானாம், நம்ம கேங்க, வெட்டுவேன்ணு குடிச்சிட்டு உளறி இருக்கான். அவன போய் ரெண்டு தட்டு தட்டுங்க.

ரஞ்சித் : சரி அண்ணா.

ரஞ்சித் அவன் குரூப் ஓட போய், ராமர் சொன்ன பையன அடிக்க போறாங்க, அவன் பேரு குரு.

ரஞ்சித் குரூப்ப பாத்ததும், குரு கூட இருந்தவங்க எல்லாம் ஓடி போயிடுறாங்க.

ரஞ்சித் to குரு : என்ன பா நீ பெரிய ரவுடியாமே.

குரு : இல்லனா நேத்து தண்ணி போட்டு ஒளறிட்டேன்.

ரஞ்சித் அவன ஒரு அரை அரையுறான்.

குரு : அண்ணா அண்ணா, என்னை மன்னிச்சிடுங்க.

ரஞ்சித் : ஏன் டா ஆளு பல்க்கா இருக்க, இப்படி அழுவுற. டேய் உன்ன அடிச்சே ஆகணும்ணு என் பாஸ் உத்தரவு.

குரு : வேற வழியே இல்லையா , நீங்க இவளோ பேரு அடிச்சா நான் தாங்க மாட்டேன்.

ரஞ்சித் : ஓ அப்பிடியா. அப்போ என் குரூப்ல ஒருத்தன் கூட சிங்கிள்ஸ் செய்யு, நீ ஜெயிச்சுட்டா, உன்ன அடிக்க மாட்டோம்.

குரு : சரி னா.

ரஞ்சித் : கூப்பிடுற அந்த ராக்கிய.

ராக்கி, குருவ பாத்து கொஞ்சம் பயபுடுறான், ஏன்னா அவன் பல்க்கா இருக்கான்.

ராக்கியும் குருவும் சண்டை போட, சுத்தி ரஞ்சித்தோட குரூப் நிக்கிறாங்க. ராக்கி, குரு கிட்ட நல்லா அடி வாங்குறான், ராக்கியாள சமாளிக்க முடியல. ரஞ்சித், ராக்கி அடி வாங்குறத பாத்து ரஞ்சித் சிரிக்கிறான். ராக்கிக்கு அது கோபத்த வர வைக்குது, அப்பறம் குருவ அடி வெளுத்து வாங்குறான், ரஞ்சித் முகம் மாறுது.

ரஞ்சித் to சதிஷ் : டேய் இந்த ராக்கி ஜெயிக்க கூடாது.

சதிஷ் : என்ன பண்ணனும்ணு சொல்லுங்க.

ரஞ்சித் : சண்டைல புகுந்து, குருவ அடிச்சிடுங்க.

ரஞ்சித் குரூப் சண்டைல புகுந்து, குருவ அடிச்சு, சண்டைல ராக்கி ஜெயிக்காம பாத்துக்குறாங்க.

அடுத்த நாள்.

ராமர் to ரஞ்சித் : டேய் வட்டிக்கு விட்ட காசு வாங்கிட்டு வாங்க.

ரஞ்சித் :சரி அண்ணா.

ராமர் : நீ என்ன வேணா பண்ணிக்கோ, எனக்கு காசு வந்து ஆகுனும். ஒருத்தன் கூட காசு கொடுக்காம நிறுத்த கூடாது.

ரஞ்சித் அவன் குரூப் கூட போய், வட்டி காச வசூலிக்க போறான்.

ரஞ்சித் to ராக்கி : டேய் போய் வட்டி காச இந்த வீட்ல எல்லாம் வாங்கு.

ராக்கி : என்னனு கேட்குறது.

ரஞ்சித் : அம்மா, தாயேனு கேளு, போடுவாங்க.

ரஞ்சித் ஓட அல்ல கைங்க எல்லாம் சிரிக்கிறாங்க. ராக்கி கோப படுறான்.

ரஞ்சித் : சரி இன்னைக்கு ஒரு நாள், நான் எப்படி காச வாங்குறேன் பாத்து கத்துக்கோ.

ரஞ்சித் காசு வாங்குறான் எல்லார் கிட்டையும், கடைசியா ஒரு வீட்ல ஒரு பொம்பள மட்டும் இருக்கா, அவ கிட்ட ரஞ்சித் தப்பா நடந்துகிறான்.ராக்கி அத பாத்து, ரஞ்சித்த புடிச்சி இழுக்குறான்.

ராக்கி to ரஞ்சித் : இது மாதிரிலாம் பண்ண சொல்லி நம்ம பாஸ் சொல்லலையே.

ரஞ்சித் : என்ன வேணா பண்ணிக்க சொன்னாரு பாஸ்.

ராக்கி : அதுக்குனு பொம்பள கிட்ட தப்பா நடந்துப்பியா.

ரஞ்சித் : டேய் நேத்து வந்தவன் நீ, என்ன கேள்வி கேட்குறீயா.

ராக்கியும், ரஞ்சித்தும் சட்டையை பிடிச்சுகிறாங்க, ரஞ்சித் குரூப் ஆளுங்க ரெண்டு பேரையும் தடுத்து விடுறாங்க.

அப்பறம் ராக்கியும் சதிஷும், தனியா பேசிக்குறாங்க.

சதிஷ் to ராக்கி : டேய் நீ என்ன ரஞ்சித் கிட்டயே சண்டைக்கு போற, நம்ம பாஸ் ராமர்க்கு அப்பறம் ரஞ்சித் தான் நம்ம பாஸ். கோபத்தை எல்லாம் கட்டுபடுத்து. அப்ப தான் இங்க பொழைக்க முடியும்.

அடுத்த நாள் ரஞ்சித்தும், அவன் ஆட்களும், குடிக்க, ராக்கிய சரக்கு வாங்க அனுப்பிட்டாங்க.

சதிஷ் to ரஞ்சித் : நம்ம பாஸ் ராமர், இந்த கோபால் கேங் எதுவுமே பண்ண மாற்றாரு, அவங்க நம்ம ஏரியா குள்ள வந்து கஞ்சா விக்கிறாங்க.

ரஞ்சித் : அதுவா கோபால பாத்தா, நம்ம ராமர் அண்ணாக்கு பயம்.

சதிஷ் : என்ன னா சொல்றிங்க.

ரஞ்சித் : இத யார்கிட்டயும் சொல்லிக்காத, இந்த மேட்டர ராமர் அண்ணனே எனக்கு ஒரு நாள் போதையில சொன்னது,ஒரு 10 வருஷம் முன்னாடி, கோபால போட்டு தள்ள நாங்க எல்லாம் போனோம், ஷூட் பண்ணிகிட்டோம் அதுல கும்பல் செதறிடிச்சு, ராமாறும் கோபாலும் மட்டும் தனியா இருக்காங்க, ரெண்டு பேரும் ஒத்தைக்கு ஒத்த சண்டை போட்டாங்க, அதுல நம்ம ராமர் ரொம்பவே அடி வாங்கிட்டாரு. அவரு அடி வாங்குன மேட்டர் யாருக்குமே தெரியாது, என்னை தவிர. ராமர்க்கு அந்த மேட்டர நினைச்சாலே ரொம்ப வருத்தம்.

சதிஷ் : இது நடக்கும் போது ராமர்க்கு என்ன வயசு இருக்கும்.

ரஞ்சித் : ராமர்க்கு 50 வயசு, கோபாலுக்கு 40 வயசு. ராமர் அண்ணா போல கோபாலும் ஒரு வீரன். இப்பவும் கோபால் ஒரே ஆள்,4 பேர அடிப்பான்னு சொல்வாங்க.

அடுத்த நாள்.

சதிஷ் to ரஞ்சித் : அண்ணா, கோபால் கேங்ல இருந்து ஒரு போன் கால் வந்தது.

ரஞ்சித் : என்ன சொன்னாங்க.

சதிஷ் : நம்ம ஆள் ஒருத்தன் கோபால் ஏரியால கஞ்சா வித்து இருக்கான், அவன தூக்கிட்டாங்களாம். பேச்சு வார்த்தைக்கு கூப்பிடுறாங்க

ரஞ்சித் : யார தூக்கி இருகாங்க.

சதிஷ் : யாருனு கேட்கதற்கு குள்ள போன் கட் ஆகிடிச்சு, திரும்ப கால் பண்ணா, போகல.

ரஞ்சித் : ராக்கியும் அசோக்கும் தான கஞ்சா பிஸ்னஸ் பாத்துக்க சொல்லி இருக்கோம்.

சதிஷ் : ஆமா னா.அவங்க ரெண்டு பேருக்கும் போன் பண்ணேன், கால் போகல.

ரஞ்சித் : அவங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தான் மாட்டி இருக்கணும்.

ராமர்,கோபால் கேங் கூட சண்டை போட்டு, கோபால் கிட்ட இருக்க அவங்க ஆள தூக்கிட்டு வர சொல்லி உத்தரவு போடுறான்.

துப்பாக்கி எல்லாம் ரெடி பண்ணி, ஆளுங்கள கார்ல கூட்டிகிட்டு ரஞ்சித் போறான். கோபால் கேங்க மீட் பண்ண இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கும் போது, அசோக் கிட்ட இருந்து கால் வருது, பேசுறாங்க அதுல அசோக் கோபால் கேங் கிட்ட மாட்லனு முடிவு ஆகுது.

ரஞ்சித் to சதிஷ் : டேய் வண்டிய திருப்பு, நம்ம போலாம்.

சதிஷ் : ஏன்னா.

ரஞ்சித் : அது தான் அசோக் தப்பிச்சிட்டான்ல.

சதிஷ் : ராக்கி மாட்டி இருப்பான்.

ரஞ்சித் : அது தான் சொல்றேன் அவன் மாட்டட்டும், அவங்க கையாள சாகட்டம். நான் அசோக் மாட்டி இருப்பானோனு சந்தேகத்துல் தான் வந்தேன்.

சதிஷ் : என்ன இருந்தாலும் அவன் நம்ம ஆளு னா, நம்ம போகலனா அவன கொன்னுடுவாங்க.

ரஞ்சித் வண்டிய திருப்பிட்டு போறான்.

ராக்கிய கொல்ல துப்பாக்கிய நெத்தி போட்டுல வைக்கிறாங்க கோபால் கேங், கரெக்ட் அந்த நேரத்துல கார்ல கரெக்டா ராமர் போய் இரங்குறான், அவன் ஆட்களோட துப்பாக்கி சூடு நடக்குது, ராக்கிய காப்பாத்திட்டாங்க.

ரஞ்சித் to சதிஷ் : ராமர் இது வரைக்கும்,அவனுக்கு அடியாளா இருந்துவங்கள, அவரே இறங்கி காப்பாத்தனது இது தான் முதல் தடவ.

சதிஷ் : அவர் கீழ இருக்கறவங்கள அவர் இப்படி பாத்துக்கறது, எனக்கு கீழ வேல செய்யுறது பெருமையா இருக்கு.

ரஞ்சித் : ஏன் ராக்கிய காப்பாத்த டைம்க்கு போலனு ராமர் கேட்டாரு, வண்டி ரிப்பேர் ஆகிடுச்சுன்னு சொன்னேன், செம திட்டு திட்டு திட்டுனாரு.

சதிஷ் : ஓ.

அடுத்த நாள் கோபால் கேங்க்கு தெரியாம இருக்க, வேற ஒரு இடத்துல தலைமறைவு ஆனாங்க. கோபால் கேங் எப்படியோ இவங்க இடத்த கண்டுபிடிச்சிடுறாங்க, ஒரு துப்பாக்கி சூடு நடக்குது எப்படியோ ராமர் கேங் தப்பிச்சிடுது.

ராமர் to ரஞ்சித்த : இந்த தலைமறைவு ஆன இடம் எப்படி கோபால் கேங்க்கு தெரிஞ்சிது, நம்ம ஆளுங்கல ஒரு ஆள் தான் அவனுங்களுக்கு காட்டி கொடுத்து இருப்பாங்க.யாருன்னு இன்னைக்கே கண்டுபிடிக்குற.

ரஞ்சித் : சரி னா.

ராமர் கொஞ்சம் நேரம் கழிச்சு அவங்க இடத்துக்கு வரான்.

ரஞ்சித் to ராமர் : அண்ணா யாரு நம்ம இடத்த காட்டி கொடுத்தாங்கனு கண்டுபிடிச்சாச்சு.

ராமர் : யாரு.

பாத்தா ராக்கி நல்லா அடிச்சி, முஞ்சில ரத்த தோடு உட்கார வச்சி இருக்காங்க.

ரஞ்சித் : அண்ணா ராக்கி தான் காட்டி கொடுத்தது.

ராமர் கண் கலங்கி இருக்கு.

ராமர் : இல்ல இவன் பண்ணி இருக்க மாட்டான்.

ரஞ்சித் ஒரு துப்பாக்கி எடுத்து ராக்கி நெத்தில வச்சு, இவனை கொன்னுடலாம்னு சொல்றான்.

ராமர் : அவன் பண்ணி இருக்க மாட்டான்.

ரஞ்சித் : எப்படி சொல்றிங்க.

ராமர் : ஏன்னா ராக்கி என் மகன்.

எல்லாரும் ஷாக் ஆகிடுறாங்க.

அப்பறம் ராமரோட அடியால் ஒருத்தன், முரளின்னு ஒருத்தன கூட்டிட்டு வராங்க, வந்து இவன் தான் நம்ம இடத்தை, கோபாலுக்கு காட்டி கொடுத்ததுனு சொல்ராங்க.

ராக்கி அடி வாங்கி இருந்த நிலையில, ராமர் போய் தூக்குறான்.

ராமர் to அவனோட கேங் : ராக்கி தான் என் மகன், அவன் நம்ம தொழிலுக்கு வரணும்னு ஆசை பட்டான், நம்ம வேலய செய்யணும்னா, அடிப்படையில இருந்து கத்துக்கணும்னு நான் தான் அடியாள சேர சொன்னேன். எவளோ கஷ்டம் வந்தாலும் என் பையன்னு சொல்ல கூடாது சொன்னேன், ஆனா இவளோ கஷ்ட படுவான்னு நான் எதிர் பாக்கல.

ராக்கிய ஹாஸ்பிடல் கூட்டினு போய், காயத்தை சரி பண்ணிட்டாங்க.

ராமர் to ரஞ்சித் : டேய் நான் தலை மறைவு ஆக போறேன், கோபால் என்னை போடணும்னு காத்துட்டு இருக்கான். நீ ராக்கிய பத்திரமா பாத்துக்கோ.

ரஞ்சித் : நீங்களும் ராக்கியும் ஏன் தனி தனியா தலைமறைவு ஆகுறீங்க.

ராமர் : ஒருத்தர் மாட்டுனா, இன்னொருத்தரு உயிர் தப்பிக்கலாம்ல. இன்னொரு விஷயம், ராக்கி உயிர்க்கு எதாவது ஆச்சு, உன் உயிர் மற்றும் உன் குடும்பத்தையே அழிச்சிடுவேன், அவன ஜாக்கிரதையா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு.

ரஞ்சித் : சரி அண்ணா.

ரஞ்சித், ராக்கியும் கொஞ்சம் அடி ஆள்களோடு, ஒரு இடத்துல தலை மறைவுல இருக்காங்க.

ராக்கி to ரஞ்சித் : இனி சிகெரட், தண்ணியெல்லாம்.

ரஞ்சித் : ஒரு ஆள் போட்டு, வாங்கிட்டு வர சொல்லுறன் சார்.

ராக்கி : இல்ல நீயே வாங்கிட்டு வந்துடு.

ரஞ்சித் : நானா, நான் இந்த அடியால்களுக்கு தலைவன்.

ராக்கி : நானே உனக்கு தலைவன், சொல்றத செய்.

ரஞ்சித் : சரி சார்.

சதிஷ்னு ஒரு அடியால் இருக்கான், அவன் பயத்தோடு வீட்டுக்கு வரான்.

ரஞ்சித் to சதிஷ் : ஏன் டா பதட்டமா வர.

சதிஷ் : அண்ணா சாப்பாடு வாங்கிட்டு வரும்போது, கோபால் ஆளுங்க என்னை follow பண்ணிட்டு வராங்க.

ரஞ்சித் : டேய் அப்போ ஏன் டா இங்க வந்த, வேற எங்கயாவது போக வேண்டியது தானே.

சதிஷ் : உள்ள வந்துட்டாங்க போல தெரியுது.

ரஞ்சித்தும் அவன் கூட்டாளிகளும், கோபால் கேங்ல மூணு பேரு வந்து இருக்காங்க, அவங்க கூட சண்டை போடுறாங்க. கோபால் கேங்ல ரெண்டு பேரு ஓடி போயிடுறாங்க, ஒருத்தன் மட்டும் ரஞ்சித் கிட்ட மாட்டிகிட்டான். அவன ராக்கி கிட்ட ஒப்படைக்கிறாங்க.

கோபால் ஆள் to ராக்கி : சார் சார் என்னை உயிரோடு விட்டுடுங்க.

ராக்கி : அப்படி எல்லாம் விட முடியாது பா.

கோபால் : எனக்கு குடும்பம் இருக்கு சார்.

ராக்கி : பேமிலி செண்டிமெண்ட்டா. சரி உனக்கு ஒரு வாய்ப்பு தரேன், என் ஆளுங்க ஒருத்தன் கூட நீ சிங்கிள்ஸ் செய்யணும், அவன ஜெயிச்சுட்டா, நீ இங்க இருந்து போலாம்.

ராக்கி, ரஞ்சித்த அவன் கூட சண்டை போட விடுறான். ரஞ்சித்தால, கோபால் ஆள அடிக்க முடியல, அடி வாங்கி கிட்டே இருக்கான்.

ராக்கி சந்தோசமா சிரிச்சிட்டே பாக்குறான். திடிர்னு ஒரு துப்பாக்கி எடுத்து ராக்கி, கோபால் ஆள சுட்டுடுறான். எல்லாம் ஷாக் ஆகிடுறாங்க.

ராக்கி to ரஞ்சித் : என் ஆளா இருந்து இப்படி அடிவாங்குறது பாக்கவே ரொம்பவே கேவலமா இருக்கு, அதுனால தான் அவன கொன்னேன்.

ரஞ்சித் : தேங்க்ஸ் சார்.

அடுத்த நாள் இடத்த மாத்திடுறாங்க .

ரஞ்சித் பாத்ரூம் போய்ட்டு வெளிய வந்து பாக்குறான், ராக்கி கழுத்துல ரத்தத்தோட செத்து கிடக்குறான்.ரஞ்சித் அழ ஆரமிச்சிடுறான், ரஞ்சித் ஆளுங்க ஓடி வராங்க.

ரஞ்சித் : டேய் இவன் செத்துட்டா, இவன் அப்பன், என்னையும் என் குடும்பத்தையும் கொன்னுடுவானேடா.

சொல்லிட்டு அழுவுறான் ரஞ்சித்.

திடிர்னு செத்துப்போன ராக்கி எழுந்து உட்காருறான். சத்தமா சிரிக்கிறான், ரஞ்சித் ஆளுகளும் ரஞ்சித்த பாத்து சிரிக்கிறாங்க. ரஞ்சித் கோபம் ஆகி ரூம் விட்டு வெளிய வந்துடுறான். சதிஷும் ரூம் விட்டு வெளிய வரான்

ரஞ்சித் to சதிஷ் : நீயும் அவங்க கூட சேர்ந்து சிரிக்கிற.

சதிஷ் : விதியை பாத்தியா னா, ஒரு நாள் அவன் சாவட்டும்னு நினைச்ச, இப்போ அவன் சாவ கூடாதுனு ஆழுகுற.

அடுத்த நாள்

ராக்கி to ரஞ்சித் : நான் pub போனும், குடிக்கணும், கூத்தடிக்கணும்.

ரஞ்சித் : கோபால் ஆளுங்க வெறி கொண்டு காத்துட்டு இருப்பாங்க, இப்ப வேணாமே.

ராக்கி : நான் போய் ஆகணும்.

ரஞ்சித் : சரி, நீங்க எங்க பேச்சை கேட்க மாட்டீங்க, நம்ம ஆளுங்களோடு போவோம்.

ராக்கி நல்லா குடிக்குறான், அப்படியே அங்க ஒரு பொண்ண உஷார் பண்ணுறான், அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரான். அந்த பொண்ணு பேரு ரேஷ்மா.

ராக்கியும், ரேஷ்மாவும், ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க . கொஞ்சம் நேரம் கழிச்சு ராக்கி அவனோட ரூம்க்கு அந்த பொண்ண கூட்டிட்டு போறான் , அப்போ அவளோட போன மறந்து ஹால்ல விட்டுட்டா, அதை குடுக்க போறான் ரஞ்சித், அப்போ தான் கவனிக்குறான், அந்த போன்ல கோபால் போட்டோ இருந்துது. ஷாக் ஆகுறான்.

ரஞ்சித் to ரேஷ்மா : யார் அந்த போட்டோல.

ரேஷ்மா : அது ஏன் ஆளு.

ரஞ்சித் : போச்சு டா.

ரஞ்சித், இந்த பொண்ணு வேணாம்னு எவ்வளவோ சொல்றான் ராக்கி கிட்ட, ராக்கி அந்த பொண்ண கூட்டிட்டு ரூம் குள்ள போய்ட்டான். கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த பொண்ணு வெளிய போய்டுச்சு.

அடுத்த நாள்.

கோபால்க்கு ரேஷ்மா, ராக்கி கூட போனது தெரிஞ்சு போகுது. அந்த பொண்ண follow பண்ணி ஒரு ஆளு எப்பவுமே இருப்பான், அவன் கோபால் கிட்ட எல்லாம் விஷயத்தையும் சொல்லிட்டான்.

கோபால் to ரேஷ்மா : என்னை தைரியம் இருந்தா, என்னை விட்டுட்டு, அவன் கூட போய் இருப்ப, அதுவும் என் எதிரி கூட.

ரேஷ்மா : எனக்கு அவன பிடிச்சு இருந்துது.

கோபால் ரேஷ்மாவ அடிக்கிறான்.

ரேஷ்மா : என் கிட்ட வீரத்தை காட்டாத அவன் கிட்ட ஒத்தைக்கு ஒத்த சண்டை போட்டு ஜெயிச்சுடு, நான் உன் காலுக்கு கீழயே இருக்கேன்.

கோபால் : ஹா ஹா ஹா, அவன இப்பவே வர சொல்லு டி, கால் பண்ணு.

ரேஷ்மா கால் பண்ணி கூப்புடுறா.

ரஞ்சித் to ராக்கி : சார் என்ன விளையாடுறிங்க,கோபால் ஒருத்தன் நாளு பேர அடிப்பான்.

ராக்கி : யோவ் அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ தள்ளு.

ரஞ்சித், கண்டிப்பா ராக்கிக்கு சாவு உறுதின்னு, ரஞ்சித், ராமர்க்கு தெரியாம குடும்பத்தோடு தலை மறைவு.

கோபாலும் ராக்கி மட்டும் ஒரு இடத்துல சண்டை போடுறாங்க, அங்க ரேஷ்மா மட்டும் இருக்கா. கோபால் ராக்கிய பொலுக்குறான், அரை மணி நேரமா ராக்கி அடிவாங்கிட்டு இருக்கான். அப்பறம் கோபத்துல ஒரு அடி ராக்கி அடிக்க கோபால் எழுந்துக்கவே இல்ல. ராக்கி ஜெயிச்சுடுறான்.

ராக்கி ஹாஸ்பிடல்ல இருக்கான்.ராமர் வந்து பாக்குறாரு.

ராமர் to ராக்கி : நீ இப்படி அடி வாங்கி இருக்கறது பாத்தா எனக்கு வருத்தமா இருக்கு, ஆனாலும் நீ கோபால ஒத்தைக்கு ஒத்தல அடிச்சது எனக்கு சந்தோசம்.

ராக்கி : உங்களுக்காக தான் பண்ணேன், நீங்க கோபால் கிட்ட அடிவாங்குனது எனக்கு தெரியும், அதுக்கு பழி வாங்க தான் அப்படி பண்ணேன், அந்த ரேஷ்மா உதவியோட. அவளுக்கு கொஞ்சம் காசு கொடுத்துடுங்க. அவளால தான் அவன் சண்டைக்கு ஒத்துக்கிட்டான்.

ராமர் : நான் பாத்துக்கிறேன்.

எப்படியும் ஒரு நாள், கோபால் அவங்கள கொல்ல வருவான்னு, கோபால, ராமர் ஆளுங்களோடு போய் கொன்னுடுறாரு.கோபால் செத்துடுறான். ராக்கி தொழில தனியா பாத்துக்குறான். ராமர் retire ஆகிடுறாரு.



Rate this content
Log in

Similar tamil story from Action