STORYMIRROR

Arul Prakash

Drama

4  

Arul Prakash

Drama

குடும்பத்தில் நாலு சகுனிகள் 04

குடும்பத்தில் நாலு சகுனிகள் 04

5 mins
358

இந்த வார கடைசில என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.


ஆதித்யா அம்மாவும், ஆதித்யா அப்பாவும் பேசிக்குறாங்க.


ஆதித்யா அப்பா : இது என் தங்கச்சி எடுத்து தந்த சட்டை, எப்படி இருக்கு.


ஆதித்யா அம்மா : ரொம்பவே நல்லா இருக்கு, ஆரஞ்சு கலர் சட்ட உங்களுக்கு செட் ஆகுமா.


ஆதித்யா அப்பா : என் தங்கச்சி எடுத்து கொடுத்த எதுமே செட் ஆகாத மாதிரி தான் உனக்கு தெரியும்.


ஆதித்யா அம்மா : அவ உங்களுக்கு ஐஸ் வைக்க இது மாதிரி வேலை லாம் பண்ரா. ஏன் இந்த வீட்ல மத்தவங்கல்லாம் இல்ல அவங்களுக்கு ஸ்வீட் செஞ்சு கொடுக்கறது, சட்டையை வாங்கி கொடுக்கறது எல்லாம் பண்ணலாம்ல.


ஆதித்யா அப்பா : அவளுக்கு என் மேல ஒரு தனி பாசம் டி.


ஆதித்யா அம்மா : அதெல்லாம் இல்ல, மாசா மாசம், எந்த குடும்பத்துக்கு எவளோ காசு கொடுக்கணும்னு முடிவு பண்றது நீங்களும் உங்க அம்மாவும் தான், அதனால தான் இந்த ஐஸ்.


ஆதித்யா அப்பா : நீ அவளை என் கிட்ட நெருங்க விட மாட்ட.


ஆதித்யா அம்மா : இதையே வெளிய போய் சொல்லாதீங்க.


ஆதித்யா அப்பா : ஏன் சட்டையை வாங்கி தந்தனு அவ கிட்ட சண்டைய வளக்காத.


ஆதித்யா அம்மா : அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.


ஆதித்யா அம்மா, கெழவியோட முதல் பொண்ணு அதாவது விசு அம்மா கிட்ட பேசுறா. பக்கத்துல விசு நிக்குறான்.


ஆதித்யா அம்மா to விசு அம்மா : ஏண்டி அம்மா, சட்டை லாம் வாங்கி கொடுத்த போல, உங்க அண்ணணுக்கு.


விசு அம்மா : ஏன் உங்க கிட்ட கேட்டு தான், வாங்கி கொடுக்கணமோ.


ஆதித்யா அம்மா : அது இல்ல டி ஆத்தா, உனக்கு மூணு அண்ணங்க இருகாங்க, அவங்களுக்கு எல்லாம் எதும் வாங்கி தரலயே, அத விடு உன் புருஷனுக்கு ஒரு சட்டை வாங்கி தரலாம்ல.


விசு அம்மா : தந்து இருக்கேன், நீங்க பாத்தது இல்ல.


விசு இதெல்லாம் பாக்குறான். போய் அவங்க அம்மா கிட்ட ரூம்ல பேசுறான்.


விசு to விசு அம்மா : என்னமா இதெல்லாம்.


விசு : பாரு டா, நான் என் அண்ணனுக்கு சட்டை வாங்கி தரது இவங்களுக்கு பொருக்குல.


விசு : நீ ஏன் முதல அவருக்கு சட்ட வாங்கி தந்த. பெரிய அத்தை கேட்கறது சரி தான், எப்போ நீ அப்பாக்கு ஒரு ஸ்வீட் செஞ்சு கொடுத்து இருப்ப, இல்ல ஒரு சட்டை எடுத்து கொடுத்து இருப்ப.


விசு அம்மா : இதெல்லாம் நீ சொல்லாத.


விசு : சொல்லுவேன், உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா, அது தான உன் குடும்பம் ஆனா நீ உன் பெரிய அண்ணனுக்கே கூஜா தூக்கிட்டு இருக்க. இதுனால அப்பாக்கும் மரியாதை இல்ல எனக்கும் மரியாதை இல்ல.


விசு அம்மா : உனக்கு என்ன டா மரியாதை இல்ல.


விசு : உங்க பெரிய அண்ணா பசங்களுக்கு கிடைக்குற மரியாதை எனக்கு கிடைக்கல.


விசு அம்மா : அந்த பசங்க படிச்சாங்க, நீ படிக்கல.


விசு : என்ன ஒரு சின்ன ஸ்கூல்ல படிக்கவச்சீங்க, உங்க பெரிய அண்ணா பசங்க பெரிய ஸ்கூல்ல படிக்கவச்சாரு அந்த கோபத்துல தான் நான் படிக்காம விட்டேன்.


விசு அம்மா : டேய் உங்க அப்பா விவரமா இருந்தா, உனக்கு ஏன் இந்த கஷ்டம், அவர் ஒரு டம்மி பீஸ்.


விசு : உடனே உன் புருஷன் மேல எல்லா பழியும் போடாத, ஊர்ல முக்க வாசி புருஷங்க டம்மி பீஸ்ங்க தான், பொண்டாட்டி தான் மரியாதைய வாங்கி தரவாங்க 


விசு அம்மா பேசமுடியுமா அழ ஆரமிக்குறா.


விசு : பேச முடியாம அழுது சாதிக்காத, நான் சொன்னதை யோசி.


விசு அங்க இருந்து கிளம்பிடுறான்.


ஆதித்யாவோட அண்ணனும்,அசோகோட முதல் அண்ணனும் பேசிருக்குறாங்க. இவங்கள ஆதித்யா அண்ணன், அசோக் அண்ணனு கூப்பிடுவோம், நம்ம புரிதலுக்காக.


ஆதித்யா அண்ணன் : டேய் என்ன லெட்டர ஒழுங்கா கொடுத்துடுவல.


அசோக் அண்ணன் : கொடுத்துடுவேன் அண்ணா.


ஆதித்யா அண்ணன் : நானும் கொடுக்குற அஞ்சாவது லெட்டர்.


அசோக் அண்ணன் : லெட்டர் கொடுத்து லவ்வ காட்டி, நீங்க ஒரு பெரியவருனு நிரூபிச்சிட்டீங்க.


ஆதித்யா அண்ணன் : பெரியவர்னா, கிழவன் மாதிரின்னு சொல்ல வரியா.


அசோக் அண்ணன் : என்னோட பெரியவர்ல நீங்க அத சொல்ல வந்தேன்.


ஆதித்யா அண்ணன் : ஓ அப்பிடி சொல்லவர. சரி அந்த பொண்ணு என்ன சொல்ரா , என்ன புடிச்சி இறுக்காமா இல்லையா.


அசோக் அண்ணன் : உங்க கவிதைய பாத்து உருகிட்டாங்களாம்.


ஆதித்யா அண்ணன் : அப்பிடி போடு. புது படத்தோட பாட்ட திருடுனா கண்டுபிடிச்சிடுவாங்கனு, பழைய பாட்ட உருவி கவிதையா வச்சு இருக்கேன்.


அசோக் அண்ணன் : பழைய பாட்ட திருடி, நீங்க ஒரு பழைய ஆளுன்னு நிரூபிச்சிட்டீங்க.


ஆதித்யா அண்ணன் : அடிக்கடி பெரியவர், பழைய ஆளுன்னு சொல்லாத, எனக்கே நான் பழைய ஆலோன்னு சந்தேகம் வருது.


அசோக் அண்ணன் : அத விடுங்கனே, உங்ககிட்ட ப்ரியானு ஒரு பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லுச்சுல, நீங்க ஏன் லவ்வ ஏத்துக்கல.


ஆதித்யா அண்ணன் : அது ஒரு பழைய கதை டா.


அசோக் அண்ணன் : சொல்லுங்க னா.


ஆதித்யா அண்ணன் : அந்த டைம் இத விட அழகான பொண்ணு நமுக்கு கிடைக்கும்னு நம்பி, அந்த பொண்ண வேணாம்னு சொல்லிட்டேன். அந்த பொண்ணு வேற என்னோட கலர் கம்மி டா.


அசோக் அண்ணன் : இப்போ மூணு வர்ஷம் ஆகியும் எந்த பொன்னும் கிடைக்காம இருக்கீங்க.


ஆதித்யா அண்ணன் : ஆமா டா.


அசோக் அண்ணன் : ஒரு வேலை நீங்க வேணாம்னு சொன்னிங்கல அந்த பொண்ணு சாபமா இருக்குமோ.


ஆதித்யா அண்ணன் : போடா, அந்த பொண்ணு பெரிய பத்மினி.


அசோக் அண்ணன் : அண்ணன் அது பத்மினி இல்ல பத்தினி.


ஆதித்யா அண்ணன் : சரி விடு, இப்போ லெட்டர் கொடுக்குற ஷீலாவ, பத்தி பேசுவோம்.


அசோக் அண்ணன் : பேசுவோம்


ஆதித்யா அண்ணன் : ஷீலா ஏன் எனக்கு நம்பர் கொடுக்க மாற்றா.


அசோக் அண்ணன் : கொஞ்சம் நாள் கழிச்சு தரேன் சொன்ன னா.


ஆதித்யா அண்ணன் : இதா டா 500 ரூபா, லெட்டர் பத்திரமா சேர்த்துடு.


அசோக் அண்ணன் : காசுலாம் வேணாம் னா.


ஆதித்யா அண்ணன் : இப்படி சொல்லி சொல்லியே 5 தடவ காசு வாங்கிட்ட நீ. இதா வச்சிக்கோ.


இவங்க பேசுறது எல்லாம் ஆதித்யா அவங்களுக்கே தெரியாம கேட்டுடுறான்.


ஆதித்யா தோட்டத்துக்கு நடந்து போய்ட்டு இருக்கும்போது, ஒரு விஷயத்தை பாத்து அதிர்ச்சி ஆகுறான். அசோக் அண்ணனும் ஷீலாவும் கை புடிச்சுகிட்டு பேசிட்டு இருக்காங்க. அசோக் அண்ணன், ஆதித்யா அண்ணன யாமாத்திட்டான். காசு வாங்கிட்டு, அந்த பொண்ணு ஷீலாவையும் இவனே லவ் பண்ணிட்டான்.


ஆதித்யா இந்த விஷயத்தை ஆதித்யா அண்ணன் தெரியற மாதிரி பன்றான்.


ஆதித்யா to ஆதித்யா அண்ணன் : அண்ணன் மிளகா தோட்டம் வழியா போ, இந்த சைடு தேரு வருது.


ஆதித்யா அண்ணன் : சரி டா.


ஆதித்யா அண்ணன், மிளகாய் தோட்டம் வழியா போகும் போது, அசோக் அண்ணனும் ஷீலாவும் கை கோர்த்துட்டு பேசிட்டு இருக்கறத பார்த்து ஷாக் ஆகுறான். ஆதித்யா அண்ணன பாத்த உடனே ஷீலா ஓடி போய்டுற.


ஆதித்யா அண்ணன் : டேய் என்ன ஏமாத்திட்டுயே டா. இது எப்படி நடந்தது.


அசோக் அண்ணன் : நீ பழைய பாட்ட உருவி கவிதையா எழுதி அனுப்புனது அவளுக்கு புடிக்கல.


ஆதித்யா அண்ணன் : அப்பறம்.


அசோக் அண்ணன் : நான் புது பாட்ட உருவி கவிதையா சொன்னேன், புடிச்சிடிச்சு.


ஆதித்யா அண்ணன் : போடா.


அசோக் அண்ணன் : ஆசிர்வாதம் பண்ணிட்டு போ னா.


ஆதித்யா அண்ணன் : நாசமா போடா.



ஆதித்யா பெரிய சண்டைய எதிர் பார்த்தது வேஸ்ட்டா போயிடிச்சு.


இப்போ ரகுவும் அவங்க அம்மாவும் பேசிக்குறத பார்ப்போம். ரகு பத்தி முன்னாடியே சொல்லி இருப்பேன், இருந்தாலும் ஒரு புரிதலக்கு சொல்றேன் இவன் கிழவியோட மூணாவது பையனோட பையன்.


ரகு to ரகு அம்மா : மா உனக்காக ஒரு புடவை வாங்கிட்டு வந்து இருக்கேன்.


ரகு அம்மா வாங்கி வச்சிடுறாங்க.


ரகு அம்மா : நன்றி பா.


ரகு : ஏன்,மூஞ்சுல ஒரு சந்தோஷத்தை காணோம்.


ரகு அம்மா : இந்த வீட்டுக்கு வந்த உடனே அது போயிடிச்சு.


ரகு : வரதட்சணை பணம் கொண்டு வரலன்னு ஒரு வீடு உன்ன ஒத்துக்குனா, அவங்கள நீ ஒத்துக்கி வை. உனக்கு நான் இருக்கேன்.


ரகு அம்மா : நீ பேசுறது ஆறுதலா இருக்கு.


ரகு : எங்க அப்பான்னு ஒரு டுபாக்கூர் இருப்பாரே, குடிக்க போய்ட்டாரா குடிகாரர்.


ரகு அம்மா : அவர அப்படி சொல்லாத.


ரகு : இந்த மாதிரி புருஷனுக்கு எப்படி வக்காலத்து வாங்குற 


ரகு அம்மா : அவரும் நல்ல மனுஷன் தான் டா. அவரு ஒரு சம்பவத்துக்கு அப்பறம் யாருக்குடவும் பேசறது இல்ல.


ரகு : என்ன சம்பவம்.


ரகு அம்மா : அத நீயே அவர் கிட்ட கேளு.


ரகு : அவர் தான் full தண்ணில இருப்பாரே.


ரகு அம்மா : பதில் சொல்வாரு, கேளு.


ரகு : சரி உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் பண்றேன்


ரகு அம்மா : நீ நல்லா படிச்சு இருந்தா நான் சந்தோஷ பட்டு இருப்பேன்.


ரகு : சரி, இப்போ சொல்லு டாக்டர் ஆகிடுவா.


ரகு அம்மா : நீ நோயாளி வேணா ஆவ.


ரகு : பருவா இல்லையே ஜோக் லாம் அடிக்கற. வெரி குட்.



Rate this content
Log in

Similar tamil story from Drama