STORYMIRROR

Arul Prakash

Drama

3  

Arul Prakash

Drama

குடும்பத்தில் நாலு சகுனிகள் 01

குடும்பத்தில் நாலு சகுனிகள் 01

4 mins
195

1. கதாநாயகர்கள் அறிமுகம் :


ஆதித்யா வயசு 23, ஷில்பா, வயசு 23


ஆதித்யா to ஷில்பா : உனக்கு புடிச்ச ஐஸ் கிரீம், falooda, லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன். கோபத்த மறந்து என் கிட்ட பேசலாமே.


ஷில்பா ஐஸ் கிரீம் எடுத்து சாப்பிடுறா.


ஆதித்யா : நீ சாப்புட ஆரமிச்சிட்டனா, கோபம் குறஞ்சிடிச்சு தான அர்த்தம்.


ஷில்பா ஐஸ் கிரீம கீழ போட்டுடுறா.


ஷில்பா : ஏன் கோபத்தை அடக்க பத்து ரூபா ஐஸ் கிரீம் தானா.


ஆதித்யா : 20 ரூபா ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரவா.


ஷில்பா : என்னை செருப்ப எடுக்க வச்சிராத.


ஆதித்யா : மன்னிச்சு.


ஷில்பா : உனக்கு மன்னிப்பே கிடையாது டா, காலேஜ்ல இருந்து லவ் பண்றோம், இப்ப ஒண்ணா சென்னைல வேல செய்யுறோம், ஒரு தடவ உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் காட்ட தான சொல்றேன்.


ஆதித்யா : அது வந்து.


ஷில்பா : டேய் நீ குடும்பம் இல்லாத பையனா. என் கிட்ட மறச்சிட்டியா.


ஆதித்யா : படம் அதிகமா பாக்காதனா கேட்குறீயா, கண்ட கதையை சொல்லிட்டு.


ஷில்பா : அப்பறம் என்ன தான் டா, உன் பிரச்னை.


ஆதித்யா : என் வீட்ல லவ் accept பண்ண மாட்டாங்க.


ஷில்பா : ஏன் டா அவ்ளோ பழைய ஆளுங்கள உங்க அம்மா அப்பா.


ஆதித்யா : ரொம்ப பழைய ஆளுங்க. இன்னும் கூட்டு குடும்பமா இருக்கோம் 


ஷில்பா : இந்த காலத்துல யாரு டா கூட்டு குடும்பம், பொரியல் குடும்பமா லாம் இருக்கறது.


ஆதித்யா : என் குடும்பம் இருக்கே. மொத்தம் 23 மூணு பேரு இருப்பாங்க வீட்ல.


ஷில்பா : என்ன டா ஒரு ஊரே இருக்கு.


ஆதித்யா : அப்பா கூட பொறந்தவங்க நாளு பேரு 2 தம்பி, 2 தங்கச்சி, அவங்க பசங்க,எங்க பாட்டி லாம் இருக்காங்க.


ஷில்பா : ஒரே அன்பா இருப்பிங்கனு சொல்லு, வீட்ல.


ஆதித்யா : உங்க வீட்ல எத்தனை பேரு இருக்கீங்க.


ஷில்பா :4 பேரு


ஆதித்யா : எவ்ளோ பிரச்சனை வரும்.


ஷில்பா : நிறையா.


ஆதித்யா : அப்போ என் குடும்பத்துல, எவ்ளோ பிரச்சனை இருக்கும்னு பாரு, ஆனா ஒரு விஷயம், யாரும் அவளவா சண்டை போட மாட்டாங்க , ஏன்னா எங்க வீட்ல பாட்டிய பாத்தா எல்லார்க்கும் பயம்.


ஷில்பா : உங்க வீட்ல யாரு மெயின் ஆன ஆளோ அவங்க கிட்ட நம்ம லவ் பத்தி சொல்லி புரியவை.


ஆதித்யா : எங்க வீட்ல எல்லாரும் சம்மதிச்சா தான் நம்ம கல்யாணம்.


ஷில்பா : அப்போ எனக்கு வேற ஒருத்தன் தான் husband ah வருவானு சொல்லு.


ஆதித்யா : ஹே என்ன பா இப்படி சொல்லிட்ட.


ஷில்பா : அப்போ எதாவது ஒரு முடிவு பண்ணு.


ஆதித்யா : என்ன னா எங்க அம்மா, அப்பா கூட சம்மதிப்பாங்க, எங்க சித்தப்பா, அத்தைங்க எல்லாம் சம்மதிக்க மாட்டாங்க.


ஷில்பா : அப்போ னா சண்டை மூட்டிவிட்டு குடும்பத்தை பிரிச்சிடு.


ஆதித்யா : உண்மைய சொல்லட்டுமா. எனக்கும் அதே பிளான் தான், ஒரு சின்ன சண்டைய பெருசு ஆக்கி, குடும்பத்தை பிரிச்சிடணும்.


ஷில்பா : எனக்கு ஒரு டவுட், அது ஒரு பாவ செயல் இல்ல.


ஆதித்யா : இல்ல வீட்ல எல்லார்க்கும் தனியா போய் குடும்பம் நடத்தணும்னு ஒரு ஒரத்துல இருக்கு, பாட்டிக்கு பயந்து எல்லாரும் இருக்காங்க.


ஷில்பா : பாட்டி தான் எல்லா பிரச்னைக்கும் காரணம் னா, கெழவிய போட்டுடலாமே.


ஆதித்யா : அப்போ உனக்கு வேற ஒருத்தன் தான் husband ah வருவான், நான் ஜெயில்க்கு போய்டுவேன்.


ஷில்பா : சாரி டா, நீ குடும்பத்தை பிரிக்கிற வழியவே பாரு.


ஆதித்யா : ஓகே. எப்பவும் சனிக்கிழமை, ஞாயிறு தான் ஊருக்கு போவேன், இன்னும் ஒரு நாளு வாரத்துல என் குடும்பத்தை பிரிக்கிறேன்.


ஷில்பா : இது தான் டா சபதம்.


அசோக், இவன் ஆதித்யாவோட சித்தப்பா பையன் தான். இவன பத்தி பார்ப்போம்.


அசோக் அவனோட friend ராம் கிட்ட பேசிட்டு இருக்கான்.


அசோக் to ராம் : டேய் புதுசா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்னு கேள்விப்பட்டேன்.


ராம் : ஆமா டா, எவளோ நாளைக்கு நீயும் நானும் இங்க இவன் கிட்டயே வேல செய்யிறது.


அசோக் : நல்ல முடிவு மச்சி. எனக்கும் அந்த ஆசை இருக்கு.


ராம் : சூப்பர், நீ என்ன பிஸ்னஸ் ஆரமிக்க போற.


அசோக் : இல்ல டா நானும் உன்கிட்ட சேர்ந்து பிஸ்னஸ் பண்ணலாம்னு பாத்தேன்.


ராம் : டேய் பிஸ்னஸ் பார்ட்னர் ஆகணும்னா, நீ காசு கொடக்கணும் டா.


அசோக் : ஒரு லட்சம் இருக்கு டா.


ராம் : ஹா ஹா ஹா, ஒரு லட்சம் வச்சு என்ன பிஸ்னஸ் பண்ணப்போற.போய் எப்பவும் செய்யுற வேலைய பாரு டா.பிஸ்னஸ் பண்ண போறானாம் ஒரு லட்சம் வச்சிக்கிட்டு.


சாயங்காலம் ரெண்டு பேரும் தண்ணி அடிக்கிறாங்க.


ராம் : டேய் காலைல உன் கிட்ட பேசினது எதும் மனசுல வச்சிக்காத டா. நிஜமாவே நீ வச்சிருக்க காச வச்சிட்டு பிஸ்னஸ் பண்ண முடியாது.


அசோக் : இப்போ அதுக்கு என்ன தான் வழி


ராம் : ஊர்ல எதுனா நிலம் இருக்கா.


அசோக் : நிலம் இருக்காவா, எங்க ஊர்லயே நாங்க தான் பெரிய பணக்காரங்க. எங்க ஊர்ல எங்க வீடு தான் landmark ey. எங்க போகணும் நாலும், எங்க வீட்ட தான் அடையாளம் சொல்லி சொல்வாங்க.


ராம் : அப்பறம் எதுக்கு உனக்கு பிஸ்னஸ்.


அசோக் : ஊர்ல என்னால விவசாயம் பாக்க முடியாது, எனக்கு சிட்டிலைப் தான் பிடிச்சிருக்கு.


ராம் : சரி காச கேட்டு வாங்கிட்டு வா.


அசோக் : நாங்க கூட்டு குடும்பம் டா, எங்க பாட்டியும், எங்க பெரியப்பன் முடிவு பண்ணா தான் மாசம் மாசம் வீட்டுக்கு காசு வரும். இதுல எங்க அம்மா அப்பா கிட்ட பிஸ்னஸ்க்கு கேட்கறது.


ராம் : யாரு உங்க வீட்ல மெயின்னு.


அசோக் : எங்க பாட்டி.


ராம் மேல பாத்து யோசிக்கிறான்.


அசோக் : பாட்டிய போட்டுடலாமானு யோசிக்கிற?


ராம் : ஆமா.


அசோக் : எல்லார்க்கும் அதே தோணுதே. கிழவி கதைக்கு ரொம்பவே முக்கியமான ஆளு, அப்புடியெல்லாம் போட்டுட முடியாது.


ராம் : வேற என்ன பண்ண போற.


அசோக் : சண்டை மூட்டிவிட்டு, குடும்பத்தை பிரிச்சு, சொத்தை வாங்கிட்டு வரேன். பிஸ்னஸ் மேன் ஆகுறேன்.


ராம் : இந்த வாரம் ஊருக்கு போறியா அப்போ.


அசோக் : இனி வாரா வாரம் ஊருக்கு போறேன்.


ராம் : ஆல் the பெஸ்ட் டா.



இப்போ ரகு (வயசு 20), விசு(வயசு 20) பத்தி பார்ப்போம். ரகு, ஆதித்யாவோட ரெண்டாவது சித்தப்பா பையன். விசு ஆதித்யாவோட அத்தை பையன். ரெண்டு பேரும் பெருசா படிக்கல, அதே ஊர்ல விவசாயம் தான் பாக்குறாங்க.


ரகு to விசு : இந்த குடும்பத்துல என்ன உழைச்சாலும், பேரும் கிடைக்காது, காசும் கிடைக்காது. அந்த கிழவியும், பெரியப்பனும் காச என்ன தான் பன்றாங்க.


விசு : கிழவி எல்லா காசையும், பெரிய புள்ள பேர்ல காச போடும்.


ரகு : காச கூட விடு டா எனக்கு இந்த குடும்பத்துல என்ன அன்பு கிடைக்குது , என்ன மரியாதை கிடைக்குது . எங்க அம்மா வரதட்சணை கம்மியா கொடுத்தாங்கனு கிழவி எங்க அம்மாவை ஒதுக்கியே வச்சிடுச்சு, கிழவி ஒதுக்குச்சினு பெரியப்பன் ஒதுக்குனா,வீடே ஒதுக்கும். அன்பும் மரியாதையும் கேட்கறது தப்பா. அந்த கிழவி ஒரு தடவ கூட பேரனாவே என்னை பாத்தது இல்ல, நான் எங்க அம்மா ஜாடையில இருக்க காரணத்துல. ஏக்கமாவும் கோபமாவும் இருக்கு டா.


விசு :நீ உன் கஷ்டத்தை சொல்லிட்ட, நான் என்னோடது சொல்றேன்.


ரகு : வேற யாரு உன் கஷ்டத்தை கேட்பா. சொல்லு 


விசு : எங்க அப்பன் வீட்டோட மாப்பிள்ளையா, வந்ததால வீட்ல சில பேரு மரியாதை கொடுக்கறது இல்ல. ஏன் எங்க அம்மாவே எங்க அப்பாவ மதிக்க மாட்டாங்க அவங்க அண்ணன் மேலயே எல்லா அன்பும் வச்சி இருப்பாங்க. எங்க அப்பாவும் ஒரு டம்மி பீஸா சவுகர்யமா வாழ்றாரு, என்னால தான் மரியாதை இல்லாம வாழ முடியறது இல்ல.


ரகு : எங்க அப்பா பெருமைய சொல்லாம விட்டுடேனே, டெய்லி குடிச்சிட்டு பொண்டாட்டிய கண்டுக்கறதே இல்ல.


விசு : சரி விடு, இதுக்கு என்ன தான் வழி.


ரகு : குடும்பத்தை பிரிச்சு சொத்தை வாங்கிட்டு மரியாதையா தனியா வாழறது.


விசு : நம்மலால முடியுமா.


ரகு : பாரு நம்ம ரெண்டு பேரும் படிக்கல, வெளிய போய் ரோஷத்தோட கஷ்டப்பட முடியாது. நம்ம இவங்க சொத்தை வாங்குறது தான் புத்திசாலித்தனம்.


விசு : அப்போ சண்டையை மூட்டி விட்டு, சொத்தை பிரிச்சிட வேண்டியது தான்.



Rate this content
Log in

Similar tamil story from Drama