Saravanan P

Abstract Drama Inspirational

5  

Saravanan P

Abstract Drama Inspirational

கடற்கரை

கடற்கரை

1 min
446


ராம் அவனது மகள் அன்பு இருவரும் அன்று கடற்கரைக்கு தன் மகளை அழைத்து சென்று இருந்தான்.


அன்பு மண்ணில் விளையாடி கொண்டே இருந்தாள்,ராம் அவளின் மீது கவனம் வைத்து கொண்டே இருந்தான்.


திடீரென்று கைபேசியில் அழைப்பு வந்ததால் ஒரு நிமிடம் அதை எடுத்து பேசிக்கொண்டிருந்தான்.


பேசிவிட்டு திரும்பி பார்த்தால் அன்பை காணவில்லை.


கடற்கரை ஓரத்தில் ஓடி தேட ஆரம்பித்தான்,அன்பு ஒரு இடத்தில் நின்று கடல் அலைகளில் எதோ ஒன்றை உற்று பார்த்து கொண்டிருந்தாள்.


ராம் அங்கு சென்று அன்பு என கத்தினான்,பின்பு முட்டியிட்டு ஏன் என் கிட்ட சொல்லாம வந்தீங்க என சொல்லி அவள் தலையை கோதினான்.


அப்பா,அங்க பாருங்க என அன்பு கை நீட்டி காட்டிய இடத்தில் ஒரு கடல் ஆமை நீண்ட நேரம் ஒரு இடத்தில் இருந்தது போல் இருந்தது.


ராம் அந்த இடத்தை சற்று கூர்ந்து பார்த்துவிட்டு அந்த கடல் ஆமை முட்டையிட கரைக்கு வந்ததையும் சிறிது நேரம் முட்டை இட்ட இடத்தை பாதுகாக்க அமர்ந்திருக்கும் என கூறினான்.


அன்பு சோகமாக தலை குனிந்து அம்மா என கூறி தேம்பினாள்.


ராம் அவளை கட்டியணைத்து அப்பா இருக்கேன் அம்மா என கூறி அவளை அங்கு இருந்து அழைத்து கொண்டு சுண்டல் வாங்கி விட்டு இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.


அப்பொழுது மீண்டும் அவர்கள் அந்த ஆமை இருந்த இடத்திற்கு சென்று பார்க்கும் பொழுது அந்த ஆமை அங்கு இல்லை.



ராம்,அன்பு இருவரும் அலை வந்து கரையில் மோதும் இடத்தில் நிற்க அலை அவர்கள் காலை நினைத்து மீண்டும் உள்ளே சென்றது.



ராம்,அன்பு இருவரும் ஓடி விளையாடினர்.


சிறிது நேரம் ஒய்வு எடுக்க அமர்ந்து மறையும் சூரியனை பார்த்து விட்டு இருவரும் பேசி கொண்டே தங்களது வண்டியை நோக்கி சென்றனர்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract