கொஞ்சம் காஃபி,கொஞ்சம் காதல்
கொஞ்சம் காஃபி,கொஞ்சம் காதல்
ரம்யா, divorce ஆன லேடி, அவளுக்கு வயசு 35. அவளுக்கு ஒரு பொண்ணு பேரு தேவி, அவ வயசு 15.ரம்யாவோட மாமியார் அவ கூட இருக்காங்க
ரம்யா அவளோட friend சுமதி கல்யாணத்துக்கு போய்ட்டு வரா.ரம்யாவும் தேவியும் வீட்ல பேசிக்கிறாங்க.
தேவி : என்ன மா உன் friend கல்யாணத்துக்கு போய்ட்டு வந்துட்டியா.
ரம்யா : எஸ் டி.
தேவி : உன் friendக்கு என்ன வயசு.
ரம்யா : 34.
தேவி :உனக்கு என்ன வயசு.
ரம்யா : 35.
தேவி : நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது.
ரம்யா : ஹே குழந்தை மாதிரி பேசுடி.
தேவி : பேசுறதுல விஷயம் இருக்கானு பாரு, வயச பாக்காத.
ரம்யா : அப்பிடியா, சரி சொல்லுங்க பெரிய மனுஷி.
தேவி : மா நான் சீரியசா பேசுறான், உனக்கு ஒரு லைப் பார்ட்னர் வேணும், இப்படியே எவ்ளோ நாளுக்கு இருக்கலாம்ன்னு இருக்க. உன் friend உன்னோட ஒரு வயசு தான் கம்மி, அவங்க இப்போ தான் லைபே ஆரமிக்குறாங்க நீ வாழ்க்கையே தொலைச்ச மாதிரி இருக்க.
ரம்யா : நீ ஓவரா பேசுற, ஆனாலும் நான் உன்ன திட்ற மூட்ல இல்ல போய் தூங்கு.
தேவி : என் வாய அடைக்கறதுலே இரு.
அடுத்த நாள்.
ரம்யா அவ தங்கச்சி பிரியாக்கு கால் பண்ரா.
ரம்யா to பிரியா : எப்படி டி இருக்க.
பிரியா : நல்ல இருக்கேன், நீ எப்படி இருக்க.
ரம்யா : குட். நேத்து திடிர்னு தேவி என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டா டி, நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்.
பிரியா : ஷாக்க குறை, அவ கரெக்ட்டா தான் சொல்லி இருக்கா, நீ இத யோசிச்சு பாத்தே ஆகணும், எந்த பையனையும் உனக்கு புடிக்கலயா.
ரம்யா : நானே சொல்லணும்ன்னு நினைச்சேன், ஆபீஸ்ல போன வாரம் ஒரு பையன் புதுசா ஜாயின் பண்ணி இருக்கான், பேரு ஆகாஷ்.எனக்கு புடிச்சிருக்கு போல தான் தெரியுது.
பிரியா : அப்பறம் என்ன அவன கரெக்ட் பண்ணிடு.
ரம்யா : ஏண்டி எனக்கு 19 வயசுல கல்யாணம் ஆச்சி, அதுக்கு முன்னாடியும் பசங்க கிட்ட பேசுனது இல்ல, அப்பறமும் பேசுனது இல்ல, இதுல நான் கரெக்ட் வேற பண்றேன்.
பிரியா : பொண்ணுங்க பல்ல காட்டுனாவே, ஆம்பளைங்க விழுந்துடுவாங்க. விதி விளக்கா சில பேரு தான் இருப்பாங்க. ஒரு ஸ்மைல் மட்டும் பண்ணு, கால்ல விழுந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்பான்.
ரம்யா : ஏதேதோ சொல்லி வெறி ஏத்தி விடுற. நாளைக்கு என்னோட புன்னகை அரசி சிரிப்ப ஒன்னு போற்ற வேண்டியது தான்.
பிரியா : தட்ஸ் மை girl.
ஆபீஸ் போய்ட்டு வீட்டுக்கு வரா ரம்யா, பிரியா போன் பண்ரா.
பிரியா to ரம்யா : என்ன டி, ஆகாஷ் உன் ஸ்மைல்ல விழுந்துடானா
ரம்யா : அதெல்லாம் அவன் மதிக்கவே இல்ல.
பிரியா : ஏன் இப்படி நடந்தது.
ரம்யா : அது ஏனோ. இனி இந்த மாதிரிலாம் ட்ரை பண்ண போறதே இல்ல.
பிரியா : ஒரு மணி ரத்னம் fan லவ் பண்ண தயங்க கூடாது. மணி ரத்னம் படத்துல வர லவ் சீன நாளைக்கு உருவாக்கு. ஆல் the பெஸ்ட்.
அடுத்த நாள் ஆபீஸ்ல.
ஆகாஷ் தனியா உட்கார்ந்துட்டு இருந்தான்.
ரம்யா : Coffee?
ஆகாஷ் : ஓகே வாங்கிட்டு வந்து டேபிள்ல வச்சிடுங்க.
ரம்யா : ஹலோ, coffee சாப்பிட போலாமான்னு கேட்டேன்.
ஆகாஷ் : சாரிங்க.
ரம்யா : ஆமா என்னை பார்த்தா டீ, coffee, வாங்கிட்டு வந்து டேபிள்ல வைக்குற பொண்ணு மாதிரி தெரியுதா.மணி ரத்னம் ஸ்டைல்ல பேசுனா, coffee வாங்கிட்டு வந்து தரணுமாமே.
ரம்யா அப்டியே பேசிகிட்டு போய்டுற.
ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த உடனே பிரியாக்கு கால் பண்ரா.
பிரியா : ஹா ஹா ஹா, coffee வாங்கிட்டு வந்து டேபிள்ல வைக்க சொன்னானா.
ரம்யா : சிரிக்காத டி, அவன் கிட்ட போய் மணிரத்னம் ஸ்டைல்ல பேசுனன் பாரு, அவன்லாம் பேரரசு fan ah இருப்பான்.இன்னைக்கு எவ்ளோ அழகா டிரஸ் பண்ணிட்டு போனேன் தெரியுமா.
பிரியா சிரிச்சிட்டே இருக்கா, ரம்யா போன கட் பண்ணிடுறா.
அடுத்த நாள் ஆபீஸ் போறா ரம்யா.
ரம்யா சீட் பக்கத்துல ஆகாஷ் வந்து நிக்குறான்.
ரம்யா to ஆகாஷ் : இப்போ ஏன் என் பக்கத்துல நிக்குற, ஓ coffee வேணுமா.
ஆகாஷ் : இல்ல மேனேஜர் ரவி உங்க கிட்ட இருக்க சொன்னார். இதோ வராரு.
மேனேஜர் ரவி : ரம்யா, இனி ஆகாஷ் உங்க டீம் தான், அவருக்கு வேலைய கத்து கொடுங்க.
ரம்யா : ஓகே ரவி.
ரம்யா மனசே ஜில்லுனு ஆகிடுது.
ரம்யா to ஆகாஷ் : எப்படி coffee வாங்கினு வந்து உங்க டேபிள்ல வைக்கணுமா.
ஆகாஷ் : சாரி ரம்யா, எதோ பழைய ஆபீஸ்ல coffee டேபிள்க்கு வரும், அந்த ஞாபக்குதுல சொல்லிட்டேன்.
ரம்யா : ஓகே ஓகே.
ஆகாஷ் : வேலைய முடிக்குறோம், ரெண்டு பேரும் போய் காபி சாப்புடுறோம்.
கேன்டீன் போய் ரெண்டு பேரும் coffee சாப்புடுறாங்க.
ரம்யா to ஆகாஷ் : ஏன் பழைய கம்பெனி விட்டுட்டு இந்த கம்பெனி வந்திங்க.
ஆகாஷ் : இந்த கம்பெனில தான் ரம்யான்னு ஒருத்தங்க இருக்காங்க, அவங்கள பாக்க தான்.
ரம்யா : ஹலோ (சிரிச்சிகிட்டே).
ஆகாஷ் : ஏன் இந்த டீம்ல பொண்ணுங்க கம்மியா இருக்காங்க.
ரம்யா : அதுவா ஆகாஷ்ன்னு ஒருத்தர் வருவாரு, அவர்கிட்ட இருந்து பெண்கள காப்பாத்த தான்.
ஆகாஷ் : ஓ அப்பிடி. நல்லா தான் பேசுறீங்க பரவா இல்ல.
ரம்யா : தேங்க்ஸ்.
அடுத்த நாள் ஆபீஸ் அப்பறம் ரெண்டு பேரும் coffee பிரேக் எடுக்குறாங்க.
ரம்யா to ஆகாஷ் : நீ யாரையாவது லவ் பண்றியா.
ஆகாஷ் : இல்லங்க.
ரம்யா: இந்த காலத்துல, யாராவது லவ் பண்ணாம இருப்பாங்களா, நீ வேற பாக்க நல்லா இருக்க.
ஆகாஷ் : ஐயோ நான் அப்படி சொல்லல, இதுக்கு முன்னாடி 5 லவ் பண்ணி இருக்கேன்.
ரம்யா : 5 பேர லவ் பண்ணியா.
ஆகாஷ் : தனி தனியா தாங்க, ஒரு லவ் பிரேக் அப் ஆன உடனே இன்னொன்னு அது மாதிரி. ஒரே நேரத்துல 5 பேர லவ் பண்ணல.
ரம்யா ஒரு மாதிரி ஆகிடுறா.
ரம்யா : ஓகே ஓகே bye.
ரம்யா வீட்டுக்கு வந்த உடனே பிரியக்கு கால் பண்ரா.
ரம்யா : 5 பேர லவ் பண்ணி இருக்கானான்டி. நம்மளையும் கழட்டி விட்டுட்டானா.
பிரியா : அக்கா நானே மூணு பசங்கள லவ் பண்ணி இருக்கேன். பையன் உனக்கு செட் ஆகுவாணான்னு பாரு கடந்த கால வாழக்கையை பத்தி உனக்கு என்ன கவலை .
ரம்யா : ஓகே டி.
அடுத்த நாள் ஆபீஸ்ல.
ரம்யா சொல்லி கொடுத்த வேலைய ஆகாஷ் பன்றான்.
ஆகாஷ் வேர்த்து போய் இருக்கான்.
ரம்யா : ஏன் வேர்த்து போய் இருக்கு, என்னாச்சு.
ஆகாஷ் : ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்.
customer accountல இருந்து அதிகமா காச எடுத்துட்டேன். தெரியாம நடந்துடுச்சு.
ரம்யா : இடியட், என்ன காரியம் பண்ணி இருக்க.
மேனேஜர் ரவி வராரு.
மேனேஜர் ரவி : யாரு இந்த தப்ப பண்ணது.
ரம்யா : நான் தான் தெரியாம பண்ணிட்டேன் ரவி.
ஆகாஷ் ஷாக் ஆகிடுறான்
மேனேஜர் : என்ன மாதிரியான வேலய செஞ்சி இருக்கீங்க, யாரு மேல் அதிகாரிகளுக்கு பதில் சொல்றது. இதுனால உங்க வேல கூட போகலாம்.
ரவி கோபமா போயிடுறாரு.
ஆகாஷ் : நீங்க ஏன் அந்த தப்ப ஏத்திகிட்டிங்க.
ரம்யா : நான் தப்பு பண்ணதால, வேல கூட போகலாம்னு சொன்னாரு, நீயா இருந்தா வேல கண்டிப்பா போய் இருக்கும்.நான் experienced நாளா என்னை அவளோ சீக்கிரம் அனுப்பமாட்டாங்க.
ஆகாஷ் : உன் வேலைக்கு எந்த பிரச்னையும் இல்லையே.
ரம்யா : நாளைக்கு தெரிஞ்சிடும் அது.
ரம்யா அடுத்த நாள் ஆபீஸ் போறா. ஆகாஷ் லீவ் அன்னைக்கு.
அதுக்கு அடுத்த நாள் ஆகாஷ் ஆபீஸ் வரான்.
ஆகாஷ் to ரம்யா : ஹே நம்ம டீம் பையன் லோகேஷ் மேல HR கிட்ட கம்பளைண்ட் பண்ணி இருக்கியாமே.
ரம்யா : ஆமா அவன் நேத்து என்னை மூணு தடவ இடிச்சு இருக்கான், அது எப்படி தெரியாம நடக்கும்.
ஆகாஷ் : இப்ப தான் ஆபீஸ் CCTV ல செக் பண்ணோம், ஒரு தடவ நீ இடிச்சு இருக்க, ரெண்டு தடவ தெரியாம தான் இடிச்சு இருக்கான்.
ரம்யா : ஐயோ சாரி.
ஆகாஷ் : முதல போய் லோகேஷ் கிட்ட சாரி கேளு, அப்பறம் நம்ம டீம்ல இருக்க எல்லாம் பசங்க கிட்டயும் நல்லா பேசி பழகு.
ரம்யா போய் லோகேஷ் கிட்ட சாரி கேட்குற, எல்லாம் பசங்க கிட்டயும் நல்ல பேசுறா.
டீம்ல சதிஷ்ன்னு ஒருத்தன் வந்து ஆகாஷ் கிட்ட பேசுறான்.
சதிஷ் to ஆகாஷ் : டேய் உனக்கும் ரம்யாக்கும் எதோ போய்ட்டு இருக்கு போல, பாத்து டா அவ divorce ஆணவ, ஒரு பொண்ணு வேற இருக்கு.
ஆகாஷ் : அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ கிளம்பு. எதுனா குட்டைய கொழப்பவே உன்ன மாதிரி ஆளுங்க நிறைய பேர் இருக்கீங்க.
ரம்யா வரா.
ரம்யா to ஆகாஷ் : டேய், நீ சொன்ன மாதிரி சாரி கேட்டுட்டேன், எல்லாம் பசங்க கிட்டயும் பேசிட்டேன்.
ஆகாஷ் : குட். உன் வேல போய்டும்ன்னு சொன்னாங்களே அது என்ன ஆச்சு.
ரம்யா : இப்ப தான் மேனேஜர் பேசுனாரு, வேல போகாது எல்லாம் ஓகே தான்.
ஆகாஷ் கண் கலங்கிடுறான்.
ரம்யா : ஏன் அழுவுற.
ஆகாஷ் : நீ வேலயா விட்டு போய்டுவியோன்னு பயந்துட்டேன்.
ரம்யா : நீ அழுவன்னு நான் எதிர் பாக்கல.
ஆகாஷ் : எனக்கு உன்ன புடிச்சிருக்கு ரம்யா, உன் கூட வாழ ஆசை படுறேன்.
ரம்யா கண்ணுல தண்ணி.
ரம்யா : நல்லா யோசிச்சிட்டியா, நான் தான் உன்னோட ஆறாவது ஆளா.
ஆகாஷ் : இல்ல என்னோட முதல் பொண்டாட்டி.
ரெண்டு பேரும் கைய புடிச்சிக்கிறாங்க.
அடுத்து ரெண்டு மாசம் ரொமான்ஸ் பன்றாங்க.
ஒரு ஹோட்டல்ல ரம்யாவும் ஆகாஷும் மீட் பன்றாங்க.
ஆகாஷ் : இந்த வாட்டி உனக்கு ப்ரோமோஷன் வரும்ன்னு ஆபீஸ்ல பேசிக்குறாங்க, congrats.
ரம்யா : தேங்க்ஸ்.
ஆகாஷ் : ஆமா உனக்கு எதுனால divorce ஆச்சி.
ரம்யா : ex husbandக்கு ஒருத்தரோட affair இருந்துச்சு.
ஆகாஷ் : ஓ ஓகே.
ரம்யா : உனக்கு ஒன்னு தெரியுமா என் மாமியார் என் கூட தான் இருக்காங்க.
ஆகாஷ் : நைஸ். உங்க மாமியார்க்கு நம்ம லவ் மேட்டர் தெரியுமா.
ரம்யாவோட மாமியாரே நேர்ல வந்துடுறாங்க. கூட ரம்யா பொண்ணு தேவி இருக்கா.
ரம்யா மாமியார் : தெரியுமே.
ரம்யா ஷாக் ஆகிடுரா.
ரம்யா to ரம்யா மாமியார் : நீங்க எங்க இந்த பக்கம்.
ரம்யா மாமியார் : தேவி வெளில போலாம்னு சொன்னா, அதான் இந்த ஹோட்டல் வந்தோம்.
ரம்யா : இவர் தான் ஆகாஷ் . ஆகாஷ் இது தான் என் மாமியார், என் பொண்ணு தேவி.
ஆகாஷ், தேவிய பாத்து ஷாக் ஆகிடுறான்.
அங்க இருந்து உடனே கிளம்பிடுறான்.
அன்னைக்கு நைட் ரம்யா ஆகாஷ்க்கு போன் பண்ரா.
ரம்யா to ஆகாஷ் : ஏன் அன்னைக்கு திடிர்னு ஹோட்டல்ல இருந்து கிளம்புன.
ஆகாஷ் : அது உன் பொண்ணா.
ரம்யா : ஆமா
ஆகாஷ் : உனக்கு அவ்ளோ பெரிய பொண்ணு இருக்கும் நான் எதிர் பாக்கல.
உனக்கும் எனக்கும் செட் ஆகாது. கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி என் உசரத்துல ஒரு மகள என்னால ஏத்துக்க முடில.
ரம்யா போன கட் பண்ணிட்டு, அழ ஆரமிச்சிடுறா.
ஒரு மாசமா ரெண்டு பேரும் பேசிக்கவே இல்ல.
ஆகாஷ் அம்மாக்கு, ஆகாஷ் friend மூலமா விஷயம் தெரியுது.
ஆகாஷ் அம்மா to ஆகாஷ் : உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும் பா.
ஆகாஷ் : சொல்லு மா.
ஆகாஷ் அம்மா : உன்ன நாங்க தத்து எடுத்து வளத்தோம், நீ எங்க சொந்த பிள்ள இல்லை.
ஆகாஷ் : என்ன மா சொல்றிங்க.
ஆகாஷ் அம்மா : எனக்கு 35 வயசு ஆகும் போது உனக்கு 15 வயசு, அப்போ கூட நான் உன்ன என் பிள்ளையை தான் நினைச்சேன்.
ஆகாஷ் : உனக்கு ரம்யா மேட்டர் தெரியுமா.
ஆகாஷ் அம்மா : ஆமா,தெரியும். அதுக்காக நாங்க தத்து எடுத்த விஷயத்தை சொன்னே. அவளை கல்யாணம் பண்ணிக்கோ
ஆகாஷ் : மா அவளுக்கு 15 வயசுல பொண்ணு இருக்கு .
ஆகாஷ் அம்மா : நீயா தூக்கி சுமக்க போற, அவளோட அம்மா அப்பா பாத்துக்க போறாங்க. உனக்கு 20 வயசுல கல்யாணம் ஆகி இருந்தாலும் உனக்கும் 15 வயசுல பொண்ணு இருந்து இருக்கும்.
ஆகாஷ் : சரி மா. கல்யாணம் பண்றேன்.
ஆகாஷ், அவங்க அம்மா பேச்சு கேட்டு, கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான். கல்யாணம் ஆகுது.

