கனவு மெய்படும்
கனவு மெய்படும்
ரஜீஷா தனது வீட்டை பொறுப்பாக கவனித்து கொள்வாள்.
காலை முதல் இரவு வரை கிடைக்கும் சிறிது நேர ஒய்வு,குழந்தை பார்த்துக்கொள்வது என அவள் வாழ்க்கை தினசரி சென்றது.
குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக அவள் தன் வேலையை விட்டு நின்றிருந்தாள்.
இப்போது குழந்தை ஒரளவு வளர்ந்திருக்கும் நிலையில் குழந்தை அம்ரித்தை அத்தையிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்ல தீர்மானித்தாள்.
வீட்டு வேலை முழுவதையும் செய்து முடிக்க நேரம் அவளுக்கு போதாது.
அத்தை சிறு சிறு வேலைகள் செய்தாலும் அவர்கள் மூட்டு வலியால் அவதி படுவதால் வெகு நேரம் நிற்க முடியாது.
ரஜிஷா நேரத்தை அதிகமாக்க இன்னும் முன்னதாக எழுந்தாள்.
இன்டர்வியூகாக தயார் ஆவாள்,பின்பு குழந்தை எழுந்தவுடன் அவனை கவனித்து விட அத்தை எழுந்து உதவிக்கு வருவார்கள்.
கணவனான ராஜேஷ்குமார் ரஜிஷாவை ஊக்கப்படுத்தினான்.அவளுக்கு தேவையான சிறு உதவிகள் செய்வான்,தற்போது அவன் கம்பெனியில் இன்டர்வியூ எவ்வாறு மாறியுள்ளது என விளக்குவான்.
ரஜிஷா தொடர்ந்து முயற்சி செய்தாள்.
வீட்டில் சண்டைகள் வர ஆரம்பித்தது,அத்தை இவ்வளவு கஷ்டபட்டு வேலை செய்யனுமா என கேட்க,கணவனோ கோபம் வந்தால் அவள் செய்த அனைத்தையும் குறை சொல்லி விட்டு வேலைக்கு செல்வான்.
சண்டை பெரிதாக ஆரம்பிக்க ரஜிஷா நம்பிக்கை தளர்ந்தது.
குழந்தையின் மடியில் படுத்து நடந்ததை சொல்லி அழுவாள்,அந்த குழந்தை எதுவும் புரியவில்லை என்றாலும் அம்மாவுக்கு முத்தம் குடுத்து முடியை பிடித்து இழுத்து விளையாடி மகிழ்ச்சி படுத்தியது அவளை.
கடைசியாக அவள் எதிர்பார்த்த வேலை அமையவில்லை,அதற்கு கீழ் உள்ள வேலை தான் கிடைத்தது.
ரஜிஷா அந்த வேலையை ஏற்று முழு உழைப்பையும் குடுத்து வேலை செய்தாள்.
ஆறு மாதங்களில் புரோமோஷன் கிடைத்தது.
அவள் அதை கணவனிடமோ,அத்தையிடமோ சொல்லவில்லை நேராக சென்று தூங்கிய குழந்தையிடம் சொல்லிவிட்டு தூக்கி கொஞ்ச ஆரம்பித்தாள்.