ஜீனியின் கதை
ஜீனியின் கதை
பெண்கள் ஜெயில்,
கடத்தல் வழக்கில் இடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட சின்னி தனது செல்லில் அமர்ந்து இருந்தாள்.
அப்பொழுது தான் தனக்கு இடப்பட்ட வேலையை முடித்து வந்தாள்.
அவளை கொல்ல அங்கு ஆட்கள் இருந்தனர்.
சாப்பிட அவள் தட்டு எடுத்து கொண்டு செல்லும்போது ஐந்து பெண்கள் அவளை ஸ்டோர் ரூம் அழைத்தனர்.
சின்னி தைரியமாக இருக்க முயற்சித்தாள்.
கதவு சாத்தப்பட்ட சத்தம் அவள் உடலை உலுக்கியது.
ஐவரும் சேர்ந்து அவளை தாக்க அவள் ஒரு இடத்தில் சென்று கீழே விழ மயக்கம் அடைந்தாள்.
பல பாத்திரங்கள் அவள் மீது விழுந்தன.
இங்கேயே கடந்து சாகட்டும் என அவளை உள்ளே வைத்து கதவை சாத்தி சென்றனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த சின்னி தண்ணீர் தேடி பாத்திரங்களை எடுத்தாள்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அவள் இரு கைகளையும் வைக்க அதில் இருந்து நீல நிறத்தில் ஒரு உருவம் வெளி வந்தது.
அது ஒரு ஆண் ஜீனி,அதீத சக்தி படைத்த ஏவல் பணி செய்ய கதைகளில் வரும் ஒரு விஷயம்,அவள் பார்த்த ஓவியம் போலவே அது இருந்தது.
நான் தான் ஜீனி ஜீங்கரா உங்கள் கட்டளை இளவரசி.
நான் இளவரசியெல்லாம் இல்ல,நான் ஒரு கிரிமினல்.
அப்படினா என ஜீங்கரா திரும்ப கேட்க,குற்றவாளி என சின்னி கூறினாள்.
சரி,சரி தங்கள் கட்டளை என கேட்க,சின்னி குடிக்க தண்ணீ சாப்பிட பிரியாணி என கேட்க,ஜீங்கரா ஒரு சொடக்கு இட தண்ணீர்,பிரியாணி வந்தது.
சின்னி அந்த சாப்பட்டை பிடி பிடிக்க ,ஆமா ஜீங்கரா உனக்கு என்ன சாப்பாடு என கேட்க,ஜீங்கரா சிரித்து கொண்டே மன்னிக்கவும்,எனக்கு சாப்பாடு கிடையாது ஏனென்றால் எனக்கு பசி,உணர்ச்சி என மனித வாழ்வு இல்லை,சக்திகள் இருந்தாலும் அதை என் இஷ்டத்துக்கு பயன்படுத்த முடியாது.
உன் வாழ்க்கை இவ்வளவு மோசமா என சின்னி கேட்க அது உங்கள் கருத்து என ஜிங்கரா சொல்லி விட்டு திரும்பி நகர தொடங்கியது.
சின்னி அந்த ஜிங்கரா பற்றி கதையை கேட்க நான் ஒரு ஜினியை இதே போல் பயன்படுத்தினேன்,அந்த ஜினி வெளி உலகில் வாழ ஆசைபட்டது,உடனே அது அழிந்து போனது,அந்த பாத்திரத்தை நான் எடுக்க நான் அதன் உள்ளே சென்று ஜினியாய் மாறினேன்.
அப்பொழுது நீ மனுஷனா இருந்து இப்படி மாறிட்டே,நல்லா தமிழ் பேசுறா,உனக்கு இந்த காதல் எதாவது என சின்னி கேட்க,இருந்தது ஆனால் நான் தான் இதற்கு உள்ளே பிடிபட்டேன் என ஜிங்கரா வேறு திசை திரும்பினான்.
சின்னி ஒரு யோசனை செய்தாள்,சரி நீ அதிலிருந்து வெளிய வா,நான் ஜீனியா மாறுறேன்.
இல்லை இல்லை அம்மா என ஜிங்கரா சொல்ல,அது என் கட்டளை என சின்னி சொல்ல ஜிங்கரா மனிதனாய் மாறி வெளி வந்தான்.
பின்பு சின்னி அவளுக்கு கட்டளை இட சொல்ல,நீ என் இப்படி மாறுன என சொல்லு என ஜிங்கரா கேட்க,
எப்படியோ என்னை கொல்ல போறாங்க அதுனால தான் இப்படி பண்ணேன்,உனக்கும் விடுதலை கிடைச்சுச்சு என சொல்ல,உண்மை என ஜீங்கரா கேட்க,"எனக்கு இந்த சக்திய வச்சு இருக்கனும்னு ஆசை."
அப்படியா என சொல்லி ஜிங்கரா அந்த பாத்திரத்தை எடுத்து சின்னியை உள்ளே இழுத்து அந்த பாத்திரத்தை சுற்றி வெளியே தூக்கி வீசினான்.
கதவு திறந்து உள்ளே வந்த ஒரு பெண் ஜிங்கராவை கண்டு கத்தியை எடுத்து அவனை குத்த பாய்ந்தாள்.
வெளியே விழுந்த பாத்திரத்தை ஒரு பெண் காலால் எட்டி நடந்து சென்றாள்.
அப்பொழுது அதில் இருந்த வெளி வந்த சின்னி "ஹேய்,எதுக்கு. அத எத்துன,ஸாரி கேட்க மாட்டியா,ஓகே சொல்லு உன் ஆசையை" என சொல்ல திரும்பி பார்த்த அந்த பெண் வாட் பெண் ஜீனியா என சொல்லி கொண்டே ஓடினாள்,ஹேய் சொல்லிட்டு போடி என சின்னி துரத்தினாள்.