செந்தில்நாதன் அத்தியாயம் 9
செந்தில்நாதன் அத்தியாயம் 9
அட்டைப்படம்: பரத்.மு
இக்கதையை படிக்கும் முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1,2,3,4,5,6,7,8 படிக்கவும்.
இக்கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.
செந்தில்நாதன் சிங்கங்களால் கொல்லப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரவுகிறது.
சிறையில் இருந்த காவலர்கள் பேசி கொண்டிருந்ததை கொண்டு இதை அறியும் கைது செய்யப்பட்ட வீரர்கள் வருத்தம் அடைகின்றனர்.
நாட்டில் மீதம் இருந்த புரட்சிப் படை வீரர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர்.
வராகன் காட்டில் குழகனின் உடலின் மீதத்தை தேடி வீரர்களை அனுப்பினான்.
அங்கு உடல் மீதம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.
நாடு முழுவதும் வீரர்களை குழகனை தேடச் சொல்லி அனுப்புகிறேன்.
வள்ளியின் வீட்டில் இருக்கும் குழகன் இதை கேள்வி பட்டு வாளை எடுத்து கொண்டு கிளம்புகிறான்.
வள்ளி குழகனை தடுக்கிறாள் அண்ணா செல்லாதீர்கள் என்று.
வள்ளியின் வீட்டு கதவை பலமாக யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
குழகன் வாளோடு சென்று அந்த கதவை திறந்தான்.
வெளியே அமுதவள்ளி போர்க்கோலத்தில் வாளோடு நின்றாள்.
அக்கா தாங்களா இது என்ன என குழகன் கேட்க அவன் முகத்தில் புரட்சி படை மூகமூடியை மாட்டினாள் அமுதவள்ளி.
பின்பு தான் அமுதவள்ளி பின் இருந்த 200 பெண் புரட்சி படை வீரர்களை காண்கிறாள்.
அவர்களுடன் நாட்டை விட்டு சென்ற புரட்சி படை வீரர்கள் திரும்ப வந்து இனணந்ததையும் அறிகிறான்.
ஒரு புரட்சி படை வீரன் ஒரு போர் கவசத்தை குழகனிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
பின்பு வராகனின் படை வீரர்கள் சிலர் அங்கு குழகனை தேடி வந்தனர்.
அவர்கள் இந்த படையை கண்டவுடன் பிற இடங்களில் உள்ள வீரர்களுக்கு சமிக்ஞை செய்ய தாங்கள் கொண்டு வந்த பெரிய சங்கு மூலம் ஒவ்வொருத்தரும் ஊதினார்கள்.
இந்த சத்தம் கேட்டு பிற இடங்களில் உள்ள பெரும்பாலான வீரர்கள் வந்தனர்.
புரட்சி படை வீரர்களும் வராகனின் படை வீரர்களும் உக்கிரமாக சண்டை போட ஆரம்பித்தனர்.
பெண்கள் ஆக்ரோஷமாக சண்டையிட வராகனின் வீரர்கள் மூர்க்கத்தனமாக தாக்கினர்.
பெண் வீரர்கள் கேடயம் கொண்டு அந்த தாக்குதல்களை தடுத்தனர்.
இந்த பெண் புரட்சி படைக்கான விதையை விதைத்தது அமுதவள்ளி தான்.
அமுதவள்ளி சிறுவயது முதல் பெண்களை வைத்து ஒரு பலம் வாய்ந்த படையை உருவாக்க வேண்டும் என தன் தந்தை நந்தனிடம் கூறினாள்.
ஆனால் இந்த படை சரியான நேரத்தில் தான் வெளிப்பட வேண்டும் என கூறினாள்.
நந்தன்,அமுதவள்ளி மற்றும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் நந்தனின் நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அந்த படை எதிர்த்து வந்த வீரர்களை துவம்சம் செய்தது.
ஆனாலும் புரட்சி படையில் பலருக்கு காயம் மற்றும் சிலர் உயிரையும் இழந்தனர்.
வராகன் திருவேந்தனின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வராகன் தனக்கு திருமண பரிசாக அந்த மாத வரியை 10 சதவிகிதம் அதிகரித்து அதை செலுத்தும்படி உத்தரவிட்டான்.
வராகன் பூங்குழலியுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தான்.
சிறையில் இருந்த புரட்சிபடையை அமுதவள்ளியின் புரட்சி படை சிறை சென்று மீட்டது.
அது மட்டுமல்லாது வராகனின் காலட்படை மற்றும் குதிரைப்படையில் இருந்தும் அவனது அராஜக ஆட்சியை எதிர்க்க நினைக்கும் வீரர்களும் அமுதவள்ளியின் படையில் சேர்ந்தனர் மற்றும் ஆயுத கிடங்குகளில் இருந்த ஆயுதங்கள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றையும் புரட்சி படைக்கு இந்த வீரர்கள் வழங்கினர்.
இதே போல் யானைப்படையில் இருந்த வீரர்களை யானைகளுடன் புரட்சி படையில் இனணந்தனர்.
அமுதவள்ளி தன்னுடைய பலம் வாய்ந்த புரட்சி படையை பார்த்து இன்று ஒரு அரக்கனின் ஆட்டம் முடிய போகிறது.
வாருங்கள் அந்த கயவனை அழிப்போம்.
உடல் மண்ணுக்கு உயிர் நம் மக்களுக்கு.
வாருங்கள் என் வீரர்களே என உரக்க கூறினாள்.
அந்த படை வராகனின் திருமணம் நடக்கும் அரண்மனையை நோக்கி வீர நடை போட்டது.
இந்த கதையின் கடைசி அத்தியாயம்
செந்தில்நாதன் அத்தியாயம் 10 என தொடரும்.
அட்டைப்படம்: பரத்.மு
.