செந்தில்நாதன் அத்தியாயம் 5
செந்தில்நாதன் அத்தியாயம் 5
அட்டைப்படம்: பரத்.மு
இக்கதையை படிக்கும் முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1,2,3,4 படிக்கவும்.
இக்கதையில் வரும் சம்பவங்கள்,பெயர்கள் அனைத்தும் கற்பனையே,யாரையும் குறிப்பிடுவன அல்ல.
வராகன் திருவேந்தன் தனது படையை கொண்டு குறுநிலை மன்னனை வெற்றி கொண்டு காட்டு வழியே வந்து கொண்டிருந்தான்.
களைப்பால் வீரர்கள் ஓய்வெடுக்க வராகனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
வராகன் வீரர்கள் கூடாரம் அமைத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.
வராகன் தனது வீரர்கள் சமைத்த உணவை உண்டான்.
அதில் ஒரு வீரன் வியர்வை பெருக்கெடுக்க குழி தோண்டி தான் கொண்டு வந்த சிறிய பாத்திரத்தை மூடினான்.
அதில் கொண்டு வந்த மயக்க மருந்து பொடியை அனைவரது உணவிலும் கலந்தான்.
பின்பு தனது வில்லில் தான் செய்த அம்பை நாண் ஏற்றி செந்தில்நாதன் இருக்கும் திசை நோக்கி எய்தான்.
செந்தில்நாதன் தனது 100 பேர் கொண்ட புரட்சி படையை வராகன் திருவேந்தன் இருக்கும் திசை நோக்கி அனுப்பினான்.
புரட்சி படையில் உள்ள அனைவரும் இரும்பு மூகமூடி அணிந்து உள்ளனர்.
செந்தில்நாதன் தன் கத்தியை உறையில் இருந்து உருவியதும் தாக்குதல் தொடங்கட்டும் என கத்தினான்.
மயக்கத்தில் இருந்த வராகன் திருவேந்தன் இந்த சத்தம் மற்றும் தாக்க வரும் வீரர்களை பார்த்து எழுந்து நிற்க முயன்றான்.
அங்கு ஓடி வந்த செந்தில்நாதன் வராகனுடைய கையில் பலமாக கீறினான்.
வராகன் கீழே விழுந்தான்.
செந்தில்நாதன் கத்தியை வைத்து வராகனை வெட்ட வரும்போது நிலம் அதிர்வதை உணர முடிந்தது.
வராகனுடைய யானை ருத்திரவாசன் தன்னுடைய சக யானைகளை அழைத்து கொண்டு அங்கே விரைந்தது.
ருத்திரன்வாசன் வராகனை துதிக்கையால் தூக்கி தன்மேல் படுக்க வைத்து கொண்டு தன்னுடைய சக யானைகளுக்கு நடுவே சென்று அமர்ந்து கொண்டது.
பின்பு வராகனை துதிக்கையால் இறக்கி கீழே வைத்து சத்தமாக பிளிறியது.
மூன்று யானைகள் ருத்திரவாச யானையுடன் சேர்ந்து வராகனின் மேல் ஆயுதங்கள் படாதபடி அரண் அமைத்தன.
பிற யானைகள் இந்த நான்கு யானைகளை சுற்றி அரண் அமைத்தன.
வராகனின் படையில் அந்த உணவை உண்ணாதோர் உக்கிரமாக சண்டையிட்டனர்.
இந்த யானைகளில் ஒன்று கூட மயக்க மருந்து கலந்த உணவை உண்ணவில்லை.
செந்தில்நாதன் தன் படையுடன் பின் வாங்கினான்.
வராகன் மயக்கத்திலும் தன் யானை ருத்திரவாசன் செய்த காரியத்தை எண்ணி கண்ணீர் துளிர்த்தான்.
சில நாட்கள் கழித்து
வராகன் தன் மெய் காப்பாளர்கள் அனைவரையும் அழைத்தான்.
உங்கள் அனைவருக்கும் வராகன் எனும் நான் பரிசு அளிக்க விரும்புகிறேன் என கூறி தன் அருகில் உள்ள பிற வீரர்களை பார்த்தான்.
அந்த வீரர்கள் இந்த மெய் காப்பாளர்களை கைது செய்து நகரின் நடுவில் இழுத்து சென்றனர்.
வராகன் கூர்மையான முட்கள் பதித்த 100 சாட்டைகள் அதாவது ஒரு மெய் காப்பாளனை அடிப்பதற்கு ஒரு சாட்டை என எடுத்து வர உத்தரவிட்டான்.
அவர்களை வரிசையாக தனித்தனியாக கம்பத்தில் கட்டி வராகன் பேச ஆரம்பித்தான் உங்களுடைய கடமையை மறந்து மது உண்டு கொண்டாடினீர் நீங்கள் எல்லோரும்.
பிற வீரர்கள் மயக்க மருந்து உண்டு மயங்கினார்.
நீங்கள் மயங்க வேண்டும் என்றே மது உண்டீர்கள்.
மெய்க்காப்பாளர்கள் தன்னை மன்னிக்கும்படி வேண்டினர்.
சரி மன்னித்து விட்டேன்
என கூறியவுடன் மெய்க்காப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வராகன் தொடர்ந்தான்
ஆனால் நான் மன்னித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
ஆனால் நான் செய்ய கூடாதென்று சொன்னது உங்களுக்கு மறந்து போக வாய்ப்பு உண்டு.
ஆகையால் இந்த தண்டனையை ஏற்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்வது உங்கள் வருங்கால அரசன் வராகன் என கூறி முடித்து முட்கள் பதித்த சாட்டையால் அந்த நூறு பேரை அடிக்க உத்தரவிட்டான்.
பின்பு வராகன் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி திரும்பினான்.
அந்த மக்கள் பயத்தில் பின் வாங்கினர்.
வராகன் சிரித்தப்படி என்னை கொல்ல வந்தவர்களுக்கு அரச மரியாதை காத்திருக்கிறது என கூறி சிரிப்பை முறைப்பாக மாற்றினான்.
கூட்டத்தில் இருந்த செந்தில்நாதன் தன் முஷ்டியினால் தன் தொடையிலேயே தட்டி கொண்டான்.
செந்தில்நாதன் அத்தியாயம் 6 என தொடரும்.