saravanan Periannan

Action Classics Thriller

4.7  

saravanan Periannan

Action Classics Thriller

செந்தில்நாதன் அத்தியாயம் 1

செந்தில்நாதன் அத்தியாயம் 1

1 min
260


 அட்டைப்படம்:  பரத்.மு


நாம் கண்ட சரித்திரக் கதைகளில் அரசன் மற்றும் அவரது குடும்பம்,அவரது அரசாங்கம் மற்றும் அவர்களது பகை, அவர்களுக்கு நடக்கும் சதிகளை மட்டுமே கண்டுள்ளோம்.

அந்த அரசின் நிம்மதியை தீர்மானிக்கும் ஒரு வீரனின் கதை இது.


கதிரவனின் ஒளி சுடர் பட்டதினால் பிரகாசித்தது அரண்மனை.

அந்த அரண்மனை வீதியின் முடிவில் ஆரம்பமாகிறது அந்த நிலத்தை நாடு என அழைக்க காரணமான மக்கள் வசிக்கும் வீதிகள்.

அங்கு உள்ள பல வீடுகள் பல கதைகளை தாங்கி நிற்கிறது.

அந்த நாட்டின் பெயர் களிறுமாநகரம்.


அந்த நாட்டில் உள்ள வீரர்கள் தங்களது தாய் நாட்டுக்கு கடமை ஆற்ற போர்க்களம் நோக்கி புறப்பட தயாரானார்கள்.

நந்தன் தனது ஐந்து வயது மகன் செந்தில்நாதனிடம் பேசிக் கொண்டனர்.

செந்தில் தனது தந்தையிடம் போர் எதற்காக எனக் கேட்டான்.

நந்தன் விளக்க தொடங்கினார்.


தன்னிடம் உள்ள செல்ல செழிப்புகள் போதவில்லை என்றும் ,தனக்கு அடுத்தவரிடம் உள்ள செல்ல செழிப்பும் வேண்டும் என்று மனதில் தோன்றும் பேராசை தான் போருக்கு காரணம் என்றார்.

செந்தில் தனது தந்தையிடம் பிறகு தாங்கள் ஏன் போருக்கு செல்கிறார்கள், தங்களுக்கும் செல்ல செழிப்பு மேல் ஆசையா? எனக் கேட்டான்.


நந்தன் புன்முறுவல் பூத்து தொடர்ந்தார்.

நம் கண்முன் தவறுகள் அல்லது தீமையான காரியங்கள் நடக்கும் போது நாம் அதை நடக்காமல் தடுக்க வேண்டும்.

உன் தந்தை தடுக்க செல்கிறேன் நடக்க உள்ள தவறுகளை.

செந்திலின் அக்கா அமுதவள்ளி அங்கு வந்து தந்தையே என்னுடனும் சற்று பேசுங்கள் என பொய் கோபம் கொண்டாள்.

அந்த நேரத்தில், அந்த குடும்பத்தின் தலைவி தெய்வபிரியாள் அங்கு வந்து நான் ஒருவள் இங்கு இருக்கிறேன் என‌ சொல்லி பொய் கோபம் பட்டாள்.


தீடீரென துந்தூபிகள் முழங்கிய சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் போர் முரசுகள் முழங்க ஆரம்பித்தன.

குடும்பம் வாழ்த்தி வழியனுப்ப ,நந்தன் சிரித்தபடி கோட்டையை நோக்கி சென்றார்.

செந்தில்நாதன் அத்தியாயம் இரண்டு என‌ தொடரும்.




Rate this content
Log in

Similar tamil story from Action