அன்பே அம்மா
அன்பே அம்மா
அட்டைப்படம் நியூஸ் பேப்பரில் இடம்பெற்றது ஆகும்.
தேவி அன்று காலை முதல் தனது ஆட்டோவில் பல சவாரிகளை செய்திருந்தாள்.
மிகவும் களைத்து போய் வீட்டிற்கு வந்த தேவி வீட்டு வாசலில் வைத்திருந்த வாளியில் கை,கால் கழுவி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
சமத்தாக அவளது மகள் ரோகிதா ஹோம் ஓர்க் செய்து கொண்டிருந்தாள்,பக்கத்து வீட்டு கமலம் அம்மா குழந்தையின் பக்கதில் அமர்ந்து கொண்டு மொபைல் பார்த்து கொண்டிருந்தார்.
தேவி,வா மா உன் பொண்ணு நல்ல விளையாடிட்டு இப்ப தான் ஒரு அரைமணி நேரம் முன்னாடி படிக்க உட்கார்ந்தாள் என சொல்ல,அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரோகிதா,அம்மா இன்னிக்கு ஹோம் ஓர்க் கொஞ்சம் தான், உங்க கூட தானே நேற்று உட்கார்ந்து ஹோம் ஓர்க் பண்ணேன் என சொல்ல தேவி சரி மா என சொல்லிவிட்டு கமலம் அம்மாவை அடுப்படிக்கு அழைத்து சென்று ரொம்ப நன்றி அம்மா, நீங்க எனக்கு தினமும் செய்யுறது பெரிய உதவி.
கமலம் அம்மா அவள் கையை இறுக பிடித்து எல்லாம் சரியாகும் என சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
தேவி சாப்பாடு போட்டு ரோகிதாக்கு ஊட்டி விட்டு கொண்டு ஒரு கணம் திரும்பும் போது அவளது கல்யாண போட்டோ ஒரு ஆணியில் தொங்கி கொண்டிருந்தது.
அன்பான கணவன் ஆன்லைன் சூதாட்டம் ஆடி நிறைய கடனுக்கு ஆளாகி இப்பொழுது வேறு மாநிலத்துக்கு சென்று லாரி ஓட்டுநராக பணியாற்றி கொஞ்சய் கொஞ்சம் பணம் அனுப்புவார்.
கடன் சும்மா இருக்காதே,வட்டி போடும்,அதனால் தனது நகைகளை விற்று சிறிது கடனை அடைத்து விட்டு ஒரு பழைய ஆட்டோவை வாங்கி சரி செய்து அதை வைத்து ஒரே குறிப்பிட்ட பகுதிகளுக்கு சவாரிகள் செய்தாள்.
தனது பெண்ணுக்கு தான் வரும் வரை துணையாக கமலம் அம்மா இருக்க அவர்களிடம் போய் பேச அவர்கள் அவளது நிலையை ஒப்புக்கொண்டு அந்த பணியை செய்து வந்தனர்.
இரண்டு பெண்கள் இந்த சமூகத்தில் தனியாக வாழ்வது அவ்வளவு பாதுகாப்பற்றதா?.
ஏன் ஆண் துணை இருந்தால் சமூகம் ஒரு போலும்,ஆண் துணை இல்லை என்றால் ஒரு போலும் இந்த சமூகம் நடக்கின்றது.
தவறு இந்த சமூகம் மீது தான்,அங்கு ஆண் இல்லாததால் இல்லை.
ஊட்டி முடித்து விட்டு தானும் உண்டு விட்டு பாத்திரங்களை விளக்கினாள் தேவி.
படுக்கையில் படுத்த தேவி தனது கால்கள் வலிப்பதை வெளி சொல்லாமல் அந்த வலியில் துடித்தாள்.
அப்பொழுது இரண்டு பிஞ்சு கைகள் அவளது கால்களை பிடித்து விட்டன.
தேவி எழுந்து பார்க்க ரோகிதா கால்களை அமுக்கி விட்டு கொண்டிருந்தாள்.
வேண்டாம் மா இங்க வா என தேவி ரோகிதாவை அழைக்க,ரோகிதா எழுந்து வந்து தேவி பக்கத்தில் அமர்ந்தாள்.
உனக்கு யார் இதை சொன்னா என தேவி கேட்க என் பிரண்ட் பசீர் இருக்கான் லா அவன் அப்பா ஆட்டோ ஓட்டுவாராம், அவங்க அப்பா ஒரு நாள் கால் ரொம்ப வலிச்சுதுனு அவனை கூப்பிட்டு கால் கொஞ்சம் அமுக்கி விடுப்பா என்றாராம் என சொல்ல,தேவி மகளை அரவணைத்து தனதருகில் படுக்க வைத்து நெஞ்சில் தட்டி கொடுத்து தாலாட்டு பாடி தூங்கி வைத்தாள்.
