யார் என்று சொல்வாயா?
யார் என்று சொல்வாயா?
விழிகளின் ஓரத்தில்
உன்னை பார்க்க வேண்டும் என்று
ஆயிரம் கனவுகள்
மனம் முழுவதும்
நிறைந்துஇருக்கிறது உன் நினைவலைகள்
சற்றும் எதிர்பார்க்காமல்
என் கண் முன்னே தோன்றினாய்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள் என்னை சுற்றி
என்ன உணர்வு இது???
புரிந்துகொள்ள முடியவில்லை
தெரிந்து கொள்ள மனம் அடித்துக்கொண்டது
என்னிடம் சொல்வாயா
நான் உனக்கு யார் என்று...