வயதான தாத்தாவின் வாழ்வியல் நினைவுகள்!
வயதான தாத்தாவின் வாழ்வியல் நினைவுகள்!
வயதான தாத்தா ஓய்வு நேரத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களை நினைத்துப் பார்க்கின்றார்!
வயதான தாத்தா தனது குடும்பத்தினரின் ஆதரவு இன்றித் தனியாகத் தவிக்கின்றார்!
வயதான தாத்தா தான் வாழ்ந்த முப்பத்தைந்து வருடத்தில் ஒரு நாளாவது தங்களது வாழ்க்கைத் துணையினை பாராட்டி இருக்கலாம் என்று வருந்துகின்றனர்!
வயதான தாத்தா தனது கோபத்தைத்தினை குறைத்துக்கொண்டு ஒரு நாளாவது தனது மனைவியுடன் அன்புடன் பேசியிருக்கலாம் என்று கவலை கொள்கிறார்!
வயதான தாத்தா தனது மனைவியின் சமையலை ஒருமுறையாவது மனம் திறந்து பாராட்டி இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஒரு நாளாவது தான் சமையல் செய்து தனது மனைவிக்கு ஊட்டி விட்டு மகிழ்ச்சியடைய வைத்திருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஒரு நாளாவது தனது மனைவிக்குப் பதில் இருவரின் துணிகளையும் சேர்த்துத் துவைத்து இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஒரு நாளாவது தொலைக் காட்சியையும், கைப்பேசியையும் துறந்துவிட்டு தனது மனைவியுடன் உரையாடி இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஒவ்வொரு நாளும் தனது வேலை தளத்தில் ஏற்படும் கோபத்தையும் எரிச்சலையும் தனது மனைவியின் மீது காட்டாமல் இருந்து இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஏதாவது ஒரு விடுமுறை நாட்களில் தனது மனைவியினை வெளியில் அழைத்துச் சென்று இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா எல்லா சுற்றுலாத் தளங்களுக்கும் தனது மனைவியின் கூட்டிச் சென்று உற்சாகப்படுத்தி இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா தன் மனைவி விரும்பிக் கேட்காத போதும் ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா தனது முழு மாதச் சம்பளப் பணத்தையும் தனது மனைவியிடமே கொடுத்து அவளை நிர்வாகம் செய்யச் சொல்லியிருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஏதாவது ஒரு நாளாவது காலையில் தன் மனைவிக்குச் சமையலில் துணையாக இருந்து இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஒரு நாளாவது தனது மனைவியினை சாப்பிட்டு விட்டாயா என்று கேட்டு இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஒரு நாளாவது தனது மனைவி சாப்பிடாத நேரங்களில் தன்னுடன் சேர்ந்து சாப்பிடு என்று சொல்லி இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா ஒரு முறையாவது தனது மனைவியில் உடல் நலத்தைப் பற்றி விசாரித்து இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா தனது மனைவி தன்னையும் குழந்தைகளையும் தொடர்ச்சியாகக் கவனிப்பதால் தான் தனது தனது மனைவியினை கவனித்து இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா தனது மனைவி நோயில் விழுந்த காலகட்டத்தில் கடன் வாங்கியாவது காப்பாற்றி இருக்கலாம் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா தனது மனைவி தன்னுடன் இருந்தபோது தான் கம்பீரமாய் வாழ்ந்ததாக உணர்கிறார்!
வயதான தாத்தா தனது மனைவி தன்னை விட்டுச் சென்றபொழுது வாழ்க்கையில் தடுக்கி விழுந்ததாக உணர்கிறார்!
வயதான தாத்தா தனக்கு மாத்தினை வாங்கித் தந்திட மூத்த மகனுக்கு நேரம் இல்லை என்று கூறுவதனை நினைத்து வருந்துகிறார்!
வயதான தாத்தா தனக்குச் சினத்துடன் உணவளிக்கும் தனது மருமகளை நினைத்து வருந்துகிறார்!
வயதான தாத்தா தனது மனைவியை எப்பொழுதும் கொண்டாடி இருக்க வேண்டும் என்று வருந்துகிறார்!
வயதான தாத்தா இறந்து போன தனது மனைவியிடம் தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்!
வயதான தாத்தா இறந்து போன தன் மனைவியின் புகைப் படத்தினை தினமும் பார்த்துப் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்!
வயதான தாத்தா மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் தனது மனைவியே தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார்!
வயதான தாத்தா தனது மனைவியின் தியாகத்தினை நினைத்துக் கொண்டாடி மகிழ்கிறார்!
வயதான தாத்தா தனது அறுபத்தைந்து வயதில் யாருக்கும் இந்த நிலை வராமல் இருக்க எப்பொழுதும் தங்கள் மனைவியுடன் பாசத்துடன் பழகுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்!
வயதான தாத்தா "தாய்க்குப் பின் தாரம்" என்னும் பழமொழியினை அனைவரிடம் கூறி வருகிறார்!
வயதான தாத்தா" மனைவியினை மதித்தால்தான் வாழ்க்கை வசந்தமாகும்" என்னும் அறிவுரையினை அனைவரிடமும் கூறி வருகிறார்!