வனம் செழிக்க வாழ்வு செழிக்கும்
வனம் செழிக்க வாழ்வு செழிக்கும்
இந்த பிரபஞ்சத்தில் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ சுவாச காற்றை தரும் பொக்கிஷம் வனம்.
வனம் தன் வாழ்வை இயல்பாக வாழ இயற்கையோடு இயல்பாக உறவாடி மெல்ல நகர்ந்து சென்று வான தேவதையோடு காதல் கொண்டு.
எல்லையில்லா இன்ப அணைப்பில் வானம் பிரசவித்த அன்பு குழந்தை மழை.
அந்த மழை பூலோகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் உயிர் வாழ வைக்கும் ஒப்பற்ற ஜீவன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாம் அனைவரும் வனம் காப்போம் உயிர் காப்போம்.