உயிர் காக்கும் நீர்.
உயிர் காக்கும் நீர்.
நிறம் கிடையாது
மணம் கிடையாது
உருவம் கிடையாது
உயிர் கிடையாது ஆனால்
உலகில் உள்ள அனைத்து
உயிர்களின் உயிர் காக்கும்
உயிர் பொக்கிஷம்
வருணபகவான் இலவசமாக
பூலோகத்திற்கு கொடுக்கும்
மழை(தண்ணீர்).
அனைத்து ஜீவராசிகளுக்கும்
பொதுவான உயிர்காக்கும்
மழை நீரை சேமித்து பாதுகாக்கும்
நிரந்தர வங்கி கடல், தற்காலிக பாதுகாப்பு வங்கி குளம்,குட்டை,ஏரிகள்.
மழை நீரை பாதுகாக்கும் பாதுகாப்பு
பெட்டகம் பூமி.
நீர் காப்போம் நிலம் காப்போம்
அனைத்து உயிர்களையும் காப்போம்.