Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Deenadayalan Adimoolam

Classics Others

4.5  

Deenadayalan Adimoolam

Classics Others

வகுப்பறை முதல் கல்லறை வரை

வகுப்பறை முதல் கல்லறை வரை

1 min
208


👨🏻‍🏫ஆசிரியரின் ஆசிர்வாதத்துடன் எனது ஆச்சர்யம்யூட்டும் ஆசிரியரை போற்றி!!!


✍️ மாதா--பிதா--குரு-- தெய்வம்! இதில் கடவுளுக்கு முன் இடம் பிடித்தாய், கடவுளை விட மேலோங்கினாய்.... கல்விகடவுளாய்


✍️ஆலமரமாய் ஊன்றினோம், இன்றும் பல விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறாய்..      

மழை மேகமாய்!


✍️தீக்குச்சியாய்!! நீ எறிந்து கரைந்தாய்,  

எங்களை, அணையா தீபம் ஆக்கினாய்...

தீப ஒளியில் 

சிலையாக திகழ்ந்தோம்-என்றுமே, நீ அடிவாங்கும் உளியாய்!!!


✍️பொறாமையில்லா ஊக்குவித்தாய்,  

சுயநலமில்லா கற்றுகொடுத்தாய்,

கோவம் கொள்ளா என் சிறகை வளர்த்தாய்,  

செல்வத்தின் மேல் அசையில்லா கல்வி செல்வம் 

அர்ப்பணித்தாய்!!!


✍️தேர்வுக்கு சோர்வாகமால் நம்பிக்கை கூடுத்தாய், 

முழு மதிப்பெண் பெற்று தேறுவதர்க்கு துணையாய் நின்றாய்!!!


✍️உன் பிள்ளை நான் இல்லை, 

தன் பிள்ளை போல் கல்வியை ஊட்டி வளர்த்தாய்!!!


✍️தன்னை மெழுகு போல உருக்கி, என்னை மெருகு ஏற்றினாய்,  

என் வாழ்வுவில் வெளிச்சம் நிரப்பினாய்!!!


✍️உன் கைரேகை, என் கை மேல் வைத்து,  

இன்று ஆனது கையெழுத்து.. 

கை நாட்டுஆகாமல்!!!


✍️உன் தியாகத்தால், இன்று உலகில் பற்பல உத்தியோகங்கள்...


✍️சமூகத்தில் வளர்ந்தேன்,  உன் முகம் மறந்தேன்...

கல்வியால் உயர்ந்தேன், உன் சிந்தனை குறைந்தேன்.. 

என் மக்களுக்கு ஊட்டும் நேரம், உன் கோவம் உணர்ந்தேன்... 

சில நேரம் முயற்சித்தேன் உன்னைப்போல், ஆனால் உன்னைப்போல் என்றுமில்லை.. 


✍️குருவின் பாதம் வணங்கியதால், வாழ்க்கை ஒழுங்கானது !!!

ஆசிரியரின் பாடத்தால், கையில் பட்டம் கிட்டியது!!!

வாத்தியாரின் வழிகாட்டுதலால், வாழ்க்கை மேலோங்கியது!!!


✍️தட்சணையில்லா உன் ஆலோசனையால், எக்கணமும் ஊட்டம் அளித்தது!!!


✍️பேராசையில்லா பேராசியரின், ஆசியால்

சான்றோன் என்ற பெயருடன் சான்றிதழ் அடைந்தேன்...


✍️பள்ளியில் வகுப்பு முடியும் நேரம் நன்றி என்றோம் !

எங்கள் வாழ்க்கை முடியும் வரை என்றுமே நன்றி உரைப்போம்.... 

🙏🙏  



என்றென்றும் , 

எண்ணத்திலும்--எழுத்திலும் உங்கள் தீதா🙏


Rate this content
Log in

Similar tamil poem from Classics