வானுலகத்திலே இன்பவிழா
வானுலகத்திலே இன்பவிழா
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
மேக மூட்டத்தினுள்ளே அவனும் நானும் கம்பளத்திலே பறந்து செல்ல கற்பனை கலந்த வெண்புறா ஒன்று வானுயர்ந்த உலகத்திலே அறுசுவைகள் உணர இன்பவிழா ஒன்று நடத்தியதே..
முழு நிலவு ஒளியில் அவனும் நானும் கண்களால் ரசித்து கொள்ள பல நட்சித்திரங்களாய் மாரி ஓடி விளையாடினோம்..
கிரகங்களை கண்டு புதுவிதமாய் விழிகள் தேடியது உலோகங்களை எட்டி பிடித்து ரசிக்க காற்றிலே பறந்து செல்ல கைகோர்த்து தாவினோம் கடலுக்கு நடுவே அவனும் நானும் நீந்தி செல்லும் மீன்களாய் மாற உன்னையேன் பிரியேன் நீயும் நானும் ஒன்றென்று இதயத்தை கொடுத்து அவன் மடியிலே விழுந்தேன் அதைவிட இதுவே எனக்கு சொர்கம் என்று சிரித்து அவன் கண்களை ரசித்தேன்..