வாழ்க்கை
வாழ்க்கை


காற்றில் அசைந்தாடும் தீபமாய்
அலைக்கழிந்தே சோர்வுறும் மனந்தனில்
சிறு பொறியாய் விழுந்த
புன்னகை கீற்றுமே
உள்ளந்தனில் அன்பினை
எண்ணந்தனில் அக்கறையை
மலையென பெருக்க போதுமே !
அன்பிலே அமைந்த உலகினையே
புன்னகையால் மேலும் ஒளியூட்டியே
ஒளிநிறை வாழ்வு தனை வசமாக்கிடுவோம் !