உயிர்போக்கி..
உயிர்போக்கி..


அறிவியல் வளர்ச்சியால்
எத்தனை அழிவுகள்..
விளைநிலங்களை எல்லாம்
வீடுகளாக்கினோம்..
தோட்டங்களை அழித்து
தொழிற்சாலைகளாக்கினோம்..
வாகனங்களாலும்,
வானூர்திகளாலும்,
வானுயரந்த புகைபோக்கிகளாலும்
ஓசையே யில்லாமல்
சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்கினோம்..
ஓசோன் படலத்தையும் ஓட்டையாக்கினோம்..
நகரமயமாக்கலால்,
நரகமயமாக்கினோம்..
உலகமயமாக்கலால்,
உலகை வெப்பமாக்கினோம்..
காற்றை மாசாக்கிவிட்டு,
சுவாசிக்க
கவசம் அணந்தோம்..
இயற்கையை மறந்து
செயற்கைக்கு மாறினோம்..
எல்லாம் அறிவியல் வளர்ச்சி என்றோம்..
இயற்கையே
எத்தனையோ சீற்றங்களால் எச்சரித்தும் இன்னமும் எட்டவில்லை
நம் அறிவுக்கு..!
எப்போது தான் உணர்வோம்..?
புகை,
உயிரை மட்டுமல்ல..
உலகையே கொல்லும்..
வானுயர்ந்த புகைபோக்கி
வரும் தலைமுறையின் உயிர்போக்கி என்று..!