STORYMIRROR

PALANI A

Inspirational

4  

PALANI A

Inspirational

தாய்மையே எல்லை..!

தாய்மையே எல்லை..!

1 min
23.9K

ஈரைந்து மாதம் 

கருவில் சுமந்தாய்..

ஈன்ற பிறகும் 

நெஞ்சில் சுமந்தாய்..


இரவெல்லாம் விழித்து

இமைபோல் காத்தாய்..

உதிரத்தை எனக்காய்

உணவாக்கி தந்தாய்..


எத்தனை தெய்வம்

எனக்காய் வேண்டினாய்..

எத்தனையோ தியாகம்

எனக்காய் செய்தாய்..


நீயே எனக்கு 

உலகைக் காட்டினாய்..

என்னையே உந்தன்

உலகாய் மாற்றினாய்..


எனக்காய் உழைத்து

உருவம் மாறினாய்..

என் நலன் காக்க

உன் நலன் மறந்தாய்..


தாயே, உனக்கு நிகராய்

தரணியில் ஏதுமில்லை..

தன்னலமில்லா அன்புக்கு

தாய்மையே எல்லை..!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational