ஊரும் உறவும் -கொல்கத்தா
ஊரும் உறவும் -கொல்கத்தா
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
நீ நடந்த சாலை..
நீ பார்த்த இடங்கள்...
நீ பயணித்த பயணம்...
நீ ருசித்த பதார்த்தங்கள்... ..
உன்னில் தோன்றிய உணர்வலைகள்...
எனக்குள்ளும் உள்வாங்கிய கற்பனை நிறைந்தது...
உனக்குப்பிடித்த பாடல்...கூகுள் மொழிப்பெயர்த்ததில்...எனக்கும் பிடித்துப்போயிட்டு....
உனக்கு சொந்தமான விவேகானந்தர்..
எனக்கும் பரிச்சயமானவர்...
உனக்குத் தாகூர் பிடித்துப்போனதால்...
எனக்கும்நெருக்கமாகிப்போனார்....
கூக்கிளியும்...ஹவுராவும்....காளியும் ...
கங்கையும். ராமகிருஷ்ணரும்.. விக்டோரியா மகாராணியும்...
மதர் தெரசாவும்...
கண் காது வழியே என்னுள்ளும் தங்கிப்போயினர்...
உன்னுடைய ஊரானதால்...அது எனக்கும் பிடித்த பட்டியலில்...
சில ஊர் பயணங்கள் ...இடங்களைத்தாண்டி...உறவு சார்ந்தது.....