தொடர்வண்டியின் பயணம்
தொடர்வண்டியின் பயணம்
சாரல் மழையின்
வேகத்தை உணராத
புறாக்கள் மரண பயத்துடன்
தொடர்வண்டியின் சன்னல் களின்
விளிம்புகளைப் பிடித்தபடி
பதுங்கிக்கிடக்க தீவிரவாத
பருந்துகள் புறாக்கள்
உயிர் குடிக்க காத்திருக்க
பருந்துகள சிறகுகளை
வெட்ட ஜடாயு பவனி வர
கடலலைகளின் சீற்றங்கள்
தாளமிட காற்றின் வேகத்தில்
காட்டுமூங்கில்கள் பூபாளம் ராகத்தை
தானாக இசைக்க
பரிதி தேர்க்கதிர்களுடன்
பவனி வரக் கண்ட
வானவில்லாள் மையல்
கொண்டபடி வருகை
புரிந்ததை வரவேற்று
குயிலினங்கள் பாடுவதை
ரசித்தபடி அடுத்த
பயணங்களை கணக்கிட
நாட்குறிப்பை தேடியபடி நான்